‘ரெமோ’ பாக்யராஜ் கண்ணன் இயக்கும் அடுத்த படத்தில், ஹீரோவாக கார்த்தி நடிக்கிறார்.
சிவகார்த்திகேயன் நடிப்பில் 2016-ம் ஆண்டு ரிலீஸான படம் ‘ரெமோ’. இந்தப் படத்தின் மூலம் பாக்யராஜ் கண்ணன் இயக்குநராக அறிமுகமானார். ஹீரோயினாக கீர்த்தி சுரேஷ் நடிக்க, சதீஷ், கே.எஸ்.ரவிகுமார், சரண்யா பொன்வண்ணன், யோகி பாபு, அருண்ராஜா காமராஜ், ‘ஆடுகளம்’ நரேன், மயில்சாமி உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்தனர்.
‘ரெமோ’ படத்தில் பெண் வேடமிட்டு நடித்தார் சிவகார்த்திகேயன். இதனால், இந்தப் படம் எல்லோரிடமும் பரவலான கவனத்தைப் பெற்றது. குறிப்பாக, குழந்தைகளுக்கு இந்தப் படம் மிகவும் பிடித்தது. இந்தப் படத்துக்குப் பிறகு படம் எதையும் இயக்காமல் இருந்தார் பாக்யராஜ் கண்ணன்.
இந்நிலையில், கார்த்தியை ஹீரோவாக வைத்து ஒரு படத்தை பாக்யராஜ் கண்ணன் இயக்கப் போவதாகத் தகவல் கிடைத்துள்ளது. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு இருவரும் இந்தப் படத்தைத் தயாரிக்கின்றனர்.
கார்த்தி தற்போது ரஜத் ரவிசங்கர் இயக்கத்தில் ‘தேவ்’ படத்தில் நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத்சிங் நடிக்கிறார். ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தைத் தொடர்ந்து இரண்டாவது முறையாக இருவரும் ஜோடி சேர்ந்துள்ளனர்.
‘தேவ்’ படத்துக்குப் பிறகு பாக்யராஜ் கண்ணன் இயக்கும் படத்தில் நடிக்கிறார் கார்த்தி. இந்தப் படத்தில் நடிக்கும் மற்ற நடிகர் - நடிகைகளின் தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
49 mins ago
ஓடிடி களம்
52 mins ago
இந்தியா
12 mins ago
தமிழகம்
56 mins ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
3 hours ago
விளையாட்டு
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
சினிமா
3 hours ago
தமிழகம்
3 hours ago
இந்தியா
3 hours ago