இந்தியில் அறிமுகமாகும் ஜீவா: கிரிக்கெட்டர் ஸ்ரீகாந்த் வேடத்தில் நடிக்கிறார்!

By செய்திப்பிரிவு

கிரிக்கெட்டை மையப்படுத்தி எடுக்கப்படும் இந்திப் படத்தில் நடிப்பதன் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகிறார் ஜீவா.

1983-ம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட்டை மையமாக வைத்து ‘1983 வேர்ல்ட் கப்’ என்ற இந்திப் படம் தயாராகிறது. உலகக்கோப்பையை வென்று இந்தியாவுக்கு எப்படி பெருமை தேடிக் கொடுத்தது இந்திய கிரிக்கெட் அணி என்பதுதான் இந்தப் படத்தின் சாரம்சம்

கபிர் கான் இயக்கும் இந்தப் படத்தில், அப்போது இந்திய அணியின் கேப்டனாக இருந்த கபில் தேவ் கதாபாத்திரத்தில், ரன்வீர் சிங் நடிக்கிறார். அவருடைய பயிற்சியாளராக நவாஸுதீன் சித்திக் நடிக்கிறார். மே மாதம் லண்டனில் இந்தப் படத்தின் ஷூட்டிங் தொடங்க இருக்கிறது. 100 நாட்கள் படம்பிடிக்கத் திட்டமிட்டுள்ளனர்.

இந்நிலையில், அந்தப் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் ஜீவா. இதுதான் ஜீவா அறிமுகமாகும் இந்திப் படம். இதில், கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

“ஸ்ரீகாந்த் கதாபாத்திரத்தில் நடிப்பது எனக்கு மிகப்பெரிய பெருமை. பிரபல பெளலரான சந்து, வீட்டுக்கே வந்து கோச்சிங் கொடுக்கிறார். நான் கிரிக்கெட்டில் மிகவும் ஆர்வம் உள்ளவன். நிறைய மேட்ச்களில் விளையாடி, ஜெயித்துள்ளேன். அப்படிப்பட்ட எனக்கு, முதல் இந்திப்பட வாய்ப்பே கிரிக்கெட்டர் கதாபாத்திரம் எனும்போது, எப்போது கேமரா முன்னாடி விளையாடுவோம் என ஆர்வமாக இருக்கிறேன்” என்கிறார் ஜீவா.

ஜீவா நடிப்பில் ‘கொரில்லா’ மற்றும் ‘ஜிப்ஸி’ ஆகிய படங்கள் ரிலீஸுக்குத் தயாராகி வருகின்றன. மேலும், அருள்நிதியுடன் இணைந்து ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கல்வி

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

தமிழகம்

8 hours ago

சினிமா

9 hours ago

சுற்றுச்சூழல்

10 hours ago

உலகம்

10 hours ago

வாழ்வியல்

10 hours ago

விளையாட்டு

11 hours ago

விளையாட்டு

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்