மலையாளத்தில் அதிக செலவில் உருவாகிவரும் படம் ‘மாராக்கர்: அரபிக்கடலின்டே சிம்மம்’. ப்ரியதர்ஷன் இயக்கிவரும் இப்படத்தில் மோகன்லால், சுனில் ஷெட்டி, மஞ்சு வாரியர், சுஹாசினி, கீர்த்தி சுரேஷ், கல்யாணி ப்ரியதர்ஷன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். முதல்முறையாக அப்பா இயக்கத்தில் நடிப்பதால் மிகுந்த சந்தோஷத்தில் இருந்தார் கல்யாணி. தற்போது ‘மாராக்கர்’ படத்தில் இவரது காட்சிகள் அனைத்தும் படமாக்கி முடிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், கல்யாணி ப்ரியதர்ஷன் கூறியிருப்பதாவது:
அப்பாவுடன் பணியாற்றுவேன் என்று 2 ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் கற்பனைகூட செய்தது இல்லை. படப்பிடிப்பு தளத்தில் முதல் நாளில் அப்பா என்னிடம், ‘‘அம்மு! நீ இதை சரியாக செய்யவில்லை’’ என்று கோபத்தில் கத்தி, நான் பயத்தோடு தலையசைத்தது முதல், ‘‘சூப்பர்! இந்த காட்சியில் நான் ஒரு ஷாட்கூட கட் செய்யப்போவதில்லை’’ என்று சொன்னது வரை எல்லாமே நினைவில் இருக்கிறது. ‘‘அச்சா! உன்னை ரொம்ப நேசிக்கிறேன். உங்கள் பிரம்மாண்ட படைப்பை இந்த உலகம் காணும் நாளுக்காக காத்திருக்கிறேன். அதில் நானும் ஒரு சிறு பங்காற்றியிருக்கிறேன் என்பதில் மகிழ்ச்சி.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
4 hours ago
சினிமா
5 hours ago
சுற்றுச்சூழல்
5 hours ago
உலகம்
6 hours ago
வாழ்வியல்
6 hours ago
விளையாட்டு
7 hours ago
விளையாட்டு
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
சினிமா
9 hours ago
க்ரைம்
8 hours ago
தமிழகம்
9 hours ago