'பேட்ட' படத்தில் ரஜினிகாந்துடன், சிம்ரன், த்ரிஷா, விஜய் சேதுபதி, சசிகுமார், பாலிவுட் நடிகர் நவாஸுதீன் சித்திக், சனந்த் ரெட்டி, மேகா ஆகாஷ், குரு சோமசுந்தரம், ராம்தாஸ், ராமச்சந்திரன் என பலர் நடித்திருக்கிறார்கள். அனிருத் இசையமைத்துள்ள இப்படத்துக்கு திரு ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.
பேட்ட படத்தில் ஒரு பாடல் 3ம் தேதியும் அடுத்த பாடல் 7ம் தேதியும் வெளியிடப்பட்டது. முழுப் பாடல்களின் ஆடியோ வெளியீட்டு விழா, இன்று 9ம் தேதி ஞாயிற்றுக்கிழமை, பிரமாண்டமாக நடைபெற்றது.
விழாவில் கலந்துகொண்டு நடிகர் பாபிசிம்ஹா பேசியதாவது:
எல்லோருக்கும் வணக்கம். பொங்கலுக்கு வரோம். பேட்ட பராக். வேற என்ன சொல்றது. தலைவர் எதிர்ல இருக்கார். உடம்பே நடுங்குது. அவரைப் பாப்பேனான்னு நினைச்சிருக்கேன். அவர் கூடவே, அதுவும் ஸ்க்ரீன்ல நிக்கிறேன். இது எனக்கு பெரிய வரம். கிஃப்ட்.
அப்படியே கடவுளைப் பாக்கற பக்தன் மாதிரிதான் ரஜினி சாரைப் பாத்துக்கிட்டிருந்தேன். அவர் ஹீரோவா நடிச்சாலும் சரி வில்லனா நடிச்சாலும் சரி… அவர் திரைல வந்தாலே போதும். ஒரே சூப்பர் ஒன்… ரஜினி சார்தான்.
இவ்வாறு பாபி சிம்ஹா பேசினார்.
பிறகு அண்ணாமலை படத்தில் வரும் ரஜினியின் வசனத்தை அவரைப் போலவே பேசிக்காட்டினார். அப்போது ரஜினி உட்பட எல்லோரும் ரசித்துக் கைத்தட்டினார்கள்.
முக்கிய செய்திகள்
சினிமா
5 mins ago
தமிழகம்
8 mins ago
இந்தியா
12 mins ago
தமிழகம்
19 mins ago
வணிகம்
25 mins ago
இந்தியா
28 mins ago
தமிழகம்
38 mins ago
தமிழகம்
42 mins ago
ஓடிடி களம்
49 mins ago
விளையாட்டு
54 mins ago
க்ரைம்
59 mins ago
வணிகம்
1 hour ago