'2.0' வெளியான 12 நாட்களில் சென்னையில் மட்டும் சுமார் 19 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
லைகா நிறுவனம் தயாரிப்பில் ரஜினி, அக்ஷய் குமார், எமி ஜாக்சன் உள்ளிட்ட பலர் நடிப்பில் நவம்பர் 29-ம் தேதி வெளியான படம் '2.0'. ஷங்கர் இயக்கியுள்ள இப்படத்துக்கு நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்ய, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்தார்.
'2.0' தமிழ் உட்பட இதர மொழிகளில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. தமிழ்நாட்டில் சென்னையில் '2.0' தொடர்ச்சியாக நல்ல வசூல் செய்து வந்தது. இதனால், சென்னையில் அதிக வசூல் செய்து முதலிடத்தில் இருக்கும் 'பாகுபலி 2' சாதனையை முறியடிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. பலரும் எதிர்பார்த்தது போலவே சென்னையில் டிசம்பர் 10-ம் தேதி வரை உள்ள வசூல்படி ரூ.19 கோடியைக் கடந்தது. இதன் மூலம் 18.85 கோடி ரூபாய் வசூல் செய்து முதலிடத்தில் இருந்த 'பாகுபலி 2' படத்தை 2-வது இடத்துக்கு தள்ளியது '2.0'.
சென்னையில் வசூலாகிவுள்ள தொகை அனைத்துமே 3டி கண்ணாடிக்கு கொடுக்கப்பட்ட தொகையும் உள்ளடக்கியது. 3டி கண்ணாடி தொகையைச் சேர்க்காமல் என்றால், 17 கோடி ரூபாயை நெருங்கியுள்ளது. அதைச் சேர்க்காமல் வரும் வசூலில் 'பாகுபலி 2' படத்தை இந்த வார இறுதிக்குள் கடக்கும் என விநியோகஸ்தர்கள் தெரிவித்தார்கள்.
சென்னையில் பல திரையரங்குகளில் 3டி தொழில்நுட்பத்திலேயே திரையிடப்பட்டு வருகிறது. முழுக்க 3டி கேமராவிலேயே ஒளிப்பதிவு செய்யப்பட்டுள்ள படம் என்பதால், 3டி-யில் திரையிடப்படும் திரையரங்குகளில் இப்போதும் டிக்கெட்டுக்கு கடும் கெடுபிடி நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் பி மற்றும் சி சென்டர்கள் எனப்படும் சென்னையைத் தாண்டிய ஊர்களில் வசூல் குறைந்த அளவில் உள்ளது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
24 mins ago
தமிழகம்
40 mins ago
தமிழகம்
1 hour ago
விளையாட்டு
2 hours ago
இந்தியா
3 hours ago
விளையாட்டு
4 hours ago
இந்தியா
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
ஜோதிடம்
5 hours ago
ஜோதிடம்
6 hours ago
ஜோதிடம்
6 hours ago