‘எந்திரன்’ இரண்டாம் பாகமாக வரும் ‘2.0’ படத்துக்கு அடுத்த அத்தியாயம் உண்டு என இயக்குநர் ஷங்கர் கூறியுள்ளார்.
ஷங்கர் இயக்கத்தில் ரஜினி, அக்ஷய் குமார், எமி ஜாக்சன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘2.0’. லைகா நிறுவனம் பெரும் பொருட்செலவில் இப்படத்தைத் தயாரித்திருக்கிறது. இந்தியளவில் பெரிய முதலீட்டில் உருவாகியுள்ள படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
நாளை மறுநாள் (நவம்பர் 29) தேதி படம் வெளியாகிறது. இப்படத்துக்கு ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளனர் தணிக்கை அதிகாரிகள்.
இப்படத்துக்கான தெலுங்குப் பதிப்பின் பத்திரிகையாளர் சந்திப்பு ஹைதராபாத்தில் நடைபெற்றது. அப்போது ‘2.0’ படத்தின் அடுத்த பாகத்தை எடுப்பீர்களா? என்று பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு ஷங்கர், “எதிர்காலத்தில் ‘2.0’ அடுத்த அத்தியாயத்துக்கான திட்டம் உள்ளது. உண்மையைச் சொல்ல வேண்டுமானால், இது தொடர்பாக சில சுவாரஸ்யமான திட்டங்கள் உதித்துள்ளன. ‘இந்தியன் 2’ படப்பிடிப்பு முடிந்தவுடன் ‘2.0’ அடுத்த அத்தியாயத்துக்கான கதையை எழுத ஆரம்பிப்பேன்” எனப் பதிலளித்திருக்கிறார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
15 mins ago
தமிழகம்
26 mins ago
விளையாட்டு
19 mins ago
தமிழகம்
46 mins ago
க்ரைம்
57 mins ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
2 hours ago