விஜய் - விக்ரம் - சிம்பு: மீண்டும் பொன்னியின் செல்வன்; படமாக்கும் முயற்சியில் மணிரத்னம்?

By ஸ்கிரீனன்

விஜய், விக்ரம் மற்றும் சிம்பு ஆகியோரை வைத்து 'பொன்னியின் செல்வன்' படத்தை இயக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார் மணிரத்னம்

மணிரத்னம் இயக்கத்தில் அரவிந்த்சாமி, விஜய் சேதுபதி, சிம்பு, அருண் விஜய், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பல நடிகர்கள் நடிப்பில் வெளியான படம் 'செக்கச்சிவந்த வானம்'. மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் மற்றும் லைகா இணைந்து இப்படத்தை தயாரித்தது.

விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இப்படத்துக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. தமிழ் சினிமாவில் நிஜமான மல்டி ஸ்டாரர் படம் என்று கொண்டாடினார்கள். தற்போது தனது நீண்ட நாள் கனவான 'பொன்னியின் செல்வன்' படத்தை இப்போது மீண்டும் கையில் எடுத்திருக்கிறார் மணிரத்னம்.

கடந்த முறை விஜய் மற்றும் மகேஷ் பாபு ஆகியோரை வைத்து முதலில் பேச்சுவார்த்தை தொடங்கினார். ஆனால், எதிர்பார்த்ததை விட பட்ஜெட் அதிகமானதால் அந்த முயற்சியைக் கைவிட்டார்.

இப்போது விஜய், விக்ரம் மற்றும் சிம்பு ஆகியோரை அணுகியிருக்கிறார் மணிரத்னம். இந்த முறை படமாக்குவதில் தீவிரம் காட்டுவதாக அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்தார்கள். விஜய்யை தன் அலுவலகத்துக்கு அழைத்து, போட்டோ ஷூட் ஒன்றையும் முடித்திருக்கிறார் மணிரத்னம். கதாபாத்திர வடிவமைப்பு எப்படியிருந்தால் அவருக்குப் பொருந்துகிறது என்பதை இதில் முடிவு செய்ததாகத் தெரிவித்தனர்.

விக்ரம் மற்றும் சிம்பு இருவரையும் வைத்து விரைவில் இதே போன்றதொரு போட்டோ ஷூட்டும் விரைவில் நடக்கும் எனத் தெரிகிறது. இப்படத்தையும் 'செக்கச்சிவந்த வானம்' படத்தை தன்னுடன் இணைந்து தயாரித்த லைகா நிறுவனமே தயாரிக்கவுள்ளதாக முதற்கட்டத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இம்முறை தனது 'பொன்னியின் செல்வன்' முயற்சியில் வெற்றி பெறுவாரா என்பது, இனிமேல் நடைபெறப்போகும் சம்பவங்களை வைத்து தெரிந்துவிடும் என்கிறார்கள் சினிமா ஆர்வலர்கள்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

38 secs ago

வாழ்வியல்

1 hour ago

க்ரைம்

28 mins ago

இந்தியா

1 hour ago

சினிமா

4 hours ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

4 hours ago

இந்தியா

1 hour ago

கருத்துப் பேழை

4 hours ago

மேலும்