சர்கார் விவகாரம்; தமக்கான ஆதவனை மக்கள் தேர்வு செய்வர்: பிரசன்னா கருத்து

By செய்திப்பிரிவு

ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை. தமக்கான ஆதவனை மக்கள் தேர்வு செய்வர் என்று 'சர்கார்' விவகாரத்தில் பிரசன்னா கருத்து தெரிவித்துள்ளார்.

விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள 'சர்கார்' திரைப்படத்தில், ஆளும் அரசுக்கு எதிரான கருத்துகள் தொடர்பாக சர்ச்சை வெடித்தது. தொடர்ந்து படத்துக்கு எதிராக ஒரு தரப்பு போராட்டம் மேற்கொண்டது. 'சர்கார்' பேனர்கள் கிழிக்கப்பட்டு ரசிகர்கள் சிலரும் திரையரங்கிலிருந்து விரட்டப்பட்டனர்.

இதையடுத்து சர்ச்சைக்குரிய கருத்துகள் படத்திலிருந்து நீக்கப்பட்டன. படம் மறு தணிக்கைக்குச் சென்று சான்றிதழும் பெற்றது. படத்தின் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் முன் ஜாமீன் கோரி நீதிமன்றம் சென்றுள்ளார்.

இந்நிலையில் 'சர்கார்' படத்துக்கும், அதிலிருந்த கருத்துகளுக்கு தமிழ் திரையுலகமே ஆதரவு தெரிவித்து நிற்கிறது. பல நட்சத்திரங்கள் ட்விட்டரில் 'சர்கார்' படத்துக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

அந்த வரிசையில், நடிகர் பிரசன்னா, "மன்னனை எதிர்த்து கேள்வி கேட்ட வரலாறும், புலவர்கள் வஞ்சப் புகழ்ச்சி செய்த இலக்கியமும் தமிழில் உண்டு. அரசை கேள்வி கேட்பதும் கேலி செய்வதும் எப்போதும் இருந்ததே! இப்போது இல்லாமல் போனது சகிப்புத்தன்மை! ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை. தமக்கான ஆதவனை மக்கள் தேர்வு செய்வர்" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

4 mins ago

சினிமா

3 hours ago

இந்தியா

12 mins ago

கருத்துப் பேழை

2 hours ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

விளையாட்டு

7 hours ago

வணிகம்

8 hours ago

விளையாட்டு

9 hours ago

தொழில்நுட்பம்

10 hours ago

சினிமா

11 hours ago

க்ரைம்

11 hours ago

மேலும்