‘பரியேறும் பெருமாள்’ படத்தைப் பாராட்டிய ‘சாய்ரட்’ இயக்குநர்

By செய்திப்பிரிவு

‘சாய்ரட்’ படத்தை இயக்கிய நாகராஜ் மஞ்சுளே, ‘பரியேறும் பெருமாள்’ படத்தைப் பாராட்டியுள்ளார்.

மாரி செல்வராஜ் இயக்குநராக அறிமுகமாகியுள்ள படம் ‘பரியேறும் பெருமாள்’. இயக்குநர் பா.இரஞ்சித், தன்னுடைய ‘நீலம் புரொடக்‌ஷன்ஸ்’ சார்பில் முதன்முதலாகத் தயாரித்துள்ள படம் இது. கதிர் ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக ஆனந்தி நடித்துள்ளார்.

கடந்த மாதம் 28-ம் தேதி ‘பரியேறும் பெருமாள்’ ரிலீஸானது. இந்தப் படத்தைப் பார்த்த அனைவருமே, படத்தைக் கொண்டாடி வருகின்றனர். சினிமா ரசிகர்கள் தொடங்கி, அரசியல் தலைவர்கள் வரை எல்லோரையும் கவர்ந்துள்ளான் ‘பரியேறும் பெருமாள்’.

இந்நிலையில், மராத்தியில் வெளியாகி சூப்பர் ஹிட்டான ‘சாய்ரட்’ படத்தின் இயக்குநரான நாகராஜ் மஞ்சுளேவும் இந்தப் படத்தைப் பாராட்டியுள்ளார். “பா.இரஞ்சித் தயாரிப்பில், மாரி செல்வராஜ் இயக்கியிருந்த ‘பரியேறும் பெருமாள்’ படத்தைப் பார்த்தேன்.

அருமையான படம். சினிமாவின் வடிவம் மற்றும் பொழுதுபோக்கில் எந்தவிதமான சமரசமும் செய்து கொள்ளாமல் உண்மையைக் காட்சிப்படுத்தி உள்ளனர். சாதிய உணர்வுள்ளவர்களின் கன்னத்தில் அறைந்தது போல் இந்தப் படம் உள்ளது” என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் நாகராஜ் மஞ்சுளே.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

16 mins ago

விளையாட்டு

51 mins ago

வணிகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

ஓடிடி களம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

வணிகம்

2 hours ago

தமிழகம்

46 mins ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

மேலும்