'இது நம்ம ஆளு' என் படம், அப்படம் தாமதமாவதால் உங்களுக்கு என்ன பிரச்சினை என்று சிம்பு காட்டமாக தெரிவித்துள்ளார்.
இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு, நயன்தாரா, சூரி உள்ளிட்ட பலர் நடிக்க தயாராகி வந்த படம் 'இது நம்ம ஆளு'. சிம்பு தயாரித்து வரும் இப்படத்திற்கு அவரின் தம்பி குறளரசன் இசையமைத்து வருகிறார். இப்படத்தின் டீஸரை விரைவில் வெளியிட இருக்கிறார்கள்.
இப்படத்தை இயக்கிக் கொண்டு இருக்கும் போதே, சூர்யாவின் தயாரிப்பு நிறுவனத்திற்காக பாண்டிராஜ் இயக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. இதனால் சிம்பு - பாண்டிராஜ் இருவருக்கும் மோதலால் படப்பிடிப்பு ரத்தனாது என்று செய்திகள் பரவின.
இந்நிலையில் 'இது நம்ம ஆளு' படம் குறித்து சிம்பு அளித்துள்ள பேட்டியில், "கிடைச்ச 20 நாள் கேப்ல கிராப் வெட்டினேன். ‘அய்யோ! படம் அவ்வளவுதான். கன்டினியூட்டி போச்சு’ன்னு செய்திகள். அய்யா, என் ஹேர்கட்டை கொஞ்சம் திருத்தினா, அதுதான் ‘இது நம்ம ஆளு’ க்ளைமாக்ஸ் லுக். போதுமா? ‘யோவ், இது என் படம்யா… உங்களுக்கு என்னய்யா பிரச்சினை?’ன்னு கத்தத் தோணுது." என்று கூறியுள்ளார்.
தற்போது, ஆகஸ்ட் 18ம் தேதி முதல் 'இது நம்ம ஆளு' படத்தின் இறுதிகட்டப் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
ஓடிடி களம்
4 mins ago
தமிழகம்
11 mins ago
தமிழகம்
25 mins ago
தமிழகம்
45 mins ago
விளையாட்டு
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
விளையாட்டு
2 hours ago
இணைப்பிதழ்கள்
2 hours ago
தமிழகம்
2 hours ago
இணைப்பிதழ்கள்
2 hours ago
இணைப்பிதழ்கள்
3 hours ago