சுந்தர்.சி இயக்கத்தில் சிம்பு நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
த்ரிவிக்ரம் இயக்கத்தில் பவன் கல்யாண், சமந்தா, ப்ரணிதா, நதியா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘அத்திரண்டிகி தாரேதி’. 2013-ம் ஆண்டு வெளியான படங்களில் அதிக வசூல் செய்த படம் என்ற மாபெரும் சாதனையை நிகழ்த்தியது.
4 நந்தி விருதுகள் உட்படப் பல்வேறு விருதுகளையும் வென்றது. மேலும், இந்தியில் ரீமேக் செய்யப்பட்டது மட்டுமன்றிக் கன்னடம், பெங்காலி மொழிகளில் ரீமேக்கும் செய்யப்பட்டது.
தற்போது இதன் தமிழ் ரீமேக் உரிமையைக் கைப்பற்றியிருக்கிறது லைகா நிறுவனம். அஜித் அல்லது விஜய் இந்தப் படத்தில் நடித்தால் நன்றாக இருக்கும் என்று கூறப்பட்ட நிலையில், சிம்பு நடிக்கிறார் என்று கூறப்படுகிறது. அதேபோல, சுந்தர்.சி இந்தப் படத்தை இயக்கவும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
‘கலகலப்பு 2’ படத்துக்குப் பிறகு வரலாற்றுப் படமான ‘சங்கமித்ரா’வை இயக்குவதாக இருந்தார் சுந்தர்.சி. ஆனால், பைனான்ஸ் பிரச்சினை காரணமாக அது எப்போது தொடங்கும் என்று தெரியாத நிலையில், இந்தப் படத்தை சுந்தர்.சி இயக்க அதிக வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.
முக்கிய செய்திகள்
சுற்றுலா
4 hours ago
தமிழகம்
10 mins ago
இந்தியா
17 mins ago
வணிகம்
20 mins ago
இந்தியா
33 mins ago
இந்தியா
40 mins ago
தமிழகம்
48 mins ago
இணைப்பிதழ்கள்
6 hours ago
இணைப்பிதழ்கள்
6 hours ago
உலகம்
55 mins ago
வணிகம்
1 hour ago
வாழ்வியல்
1 hour ago