கேரள வெள்ளப் பாதிப்பு: உதயநிதி ரூ.10 லட்சம், அருள்நிதி ரூ.5 லட்சம் நிதியுதவி

By செய்திப்பிரிவு

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு, உதயநிதி ஸ்டாலின் 10 லட்ச ரூபாயும், அருள்நிதி 5 லட்ச ரூபாயும் நிதியுதவி வழங்கியுள்ளனர்.

கேரளாவில் கடந்த 9 நாட்களாகப் பலத்த மழை பெய்து வருகிறது. 14க்கும் மேற்பட்ட மாவட்டங்களை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி இதுவரை 350க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இரண்டு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வீடுகளை இழந்து, அரசின் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

பலரும் கேரளாவுக்கு உதவி வரும் நிலையில், சினிமா பிரபலங்களும் நிதியுதவி அளித்து வருகின்றனர். கமல்ஹாசன் 25 லட்ச ரூபாய், சூர்யா மற்றும் கார்த்தி இணைந்து 25 லட்ச ரூபாய், விஷால் 10 லட்ச ரூபாய், ஸ்ரீபிரியா 10 லட்ச ரூபாய், தென்னிந்திய நடிகர் சங்கம் 5 லட்ச ரூபாய், ரோகிணி 2 லட்ச ரூபாய் வழங்கியுள்ளனர்.

மேலும், விஜய் சேதுபதி 25 லட்ச ரூபாய், தனுஷ் 15 லட்ச ரூபாய், சித்தார்த் 10 லட்ச ரூபாய், நயன்தாரா 10 லட்ச ரூபாய், தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் 25 லட்ச ரூபாய், இயக்குநர் ஷங்கர் 10 லட்ச ரூபாய், ரஜினிகாந்த் 15 லட்ச ரூபாய் அளித்துள்ளனர்.

இந்நிலையில், நடிகர்கள் உதயநிதி ஸ்டாலின்10 லட்ச ரூபாயும், அருள்நிதி 5 லட்ச ரூபாயும் நிதியுதவி அளித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

3 mins ago

சினிமா

25 mins ago

தமிழகம்

53 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

வாழ்வியல்

3 hours ago

க்ரைம்

2 hours ago

இந்தியா

3 hours ago

சினிமா

5 hours ago

வாழ்வியல்

1 hour ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்