வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், சமுத்திரகனி, அமீர், ஆண்ட்ரியா நடிப்பில் உருவான ‘வடசென்னை’ படத்தின் அனைத்து வேலைகளும் முடிந்து, ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இந்நிலையில் தற்போது ‘மாரி 2’ மற்றும் தான் புதிதாக இயக்க உள்ள படத்தின் கதையில் கவனம் செலுத்தி வரும் தனுஷ் அடுத்து ‘முண்டாசுப்பட்டி’ இயக்குநர் ராம்குமார் படத்தின் கதையில் நடிக்க ஓ.கே. சொல்லியிருக்கிறார் தனுஷ்.
இயக்குநர் ராம்குமார் தற்போது விஷ்ணு விஷால் நடிப்பில் ‘ராட்சசன்’ படத்தின் இறுதிகட்ட வேலைகளில் கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் ‘ராட்சசன்’ படத்தின் சில நிமிடக் காட்சிகளை பார்த்த தனுஷ், தானே முன்வந்து ராம்குமாரிடம், ‘கதை இருக்கிறதா?’ என்று கேட்டிருக்கிறார். அதன்பிறகு அவர் சொன்ன கதை, தனுஷை வெகுவாக ஈர்த்துவிட்டதாம். உடனடியாக பட வேலைகளைத் தொடங்க இரு தரப்பினரும் முடிவெடுத்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 min ago
தமிழகம்
8 mins ago
வணிகம்
14 mins ago
இந்தியா
17 mins ago
தமிழகம்
27 mins ago
தமிழகம்
31 mins ago
ஓடிடி களம்
38 mins ago
விளையாட்டு
43 mins ago
க்ரைம்
48 mins ago
வணிகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
சுற்றுலா
1 hour ago