தெலுங்கில் ரீமேக் ஆகிறது ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’

By செய்திப்பிரிவு

சந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்கத்தில் ரிலீஸான ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படம், தெலுங்கில் ரீமேக் செய்யப்படுகிறது.

சந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்கத்தில் ரிலீஸான படம் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’. அடல்ட் ஹாரர் காமெடிப் படமான இதில், கெளதம் கார்த்திக், வைபவி ஷாண்டில்யா, யாஷிகா ஆனந்த், சந்திரிகா ரவி, ஷா ரா, கருணாகரன், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், பால சரவணன், ஜான் விஜய், மதுமிதா ஆகியோர் நடித்திருந்தனர்.

இந்த ஆண்டு மே மாதம் வெளியான இந்தப் படம், பலராலும் விமர்சிக்கப்பட்டது. பலரும் இந்தப் படத்துக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கினர். அதேசமயம், வசூலிலும் குறை வைக்கவில்லை. இந்தப் படத்தைத் தயாரித்த ஸ்டுடியோ க்ரீன் புரொடக்‌ஷனுக்கு நல்ல லாபம் கிடைத்தது.

‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்தைத் தொடர்ந்து ‘கஜினிகாந்த்’ என்ற படத்தை இயக்கினார் சந்தோஷ் பி ஜெயக்குமார். முதல் இரண்டு படங்களைப் போல இல்லாமல், இந்தப் படத்துக்கு ‘யு’ சான்றிதழ் வழங்கியது சென்சார் போர்டு.

இந்நிலையில், ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்தைத் தெலுங்கில் ரீமேக் செய்யப் போகிறார் சந்தோஷ் பி ஜெயக்குமார். ஆதித் அருண் இதில் ஹீரோவாக நடிக்கிறார். மற்ற விவரங்கள் விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

விளையாட்டு

3 hours ago

இந்தியா

4 hours ago

வணிகம்

5 hours ago

விளையாட்டு

5 hours ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

க்ரைம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

உலகம்

8 hours ago

இந்தியா

9 hours ago

மேலும்