தோழியாக மட்டுமே உன் பக்கம் நிற்கிறேன் என நித்யா சொன்னதால், மனமுடைந்து அழுதார் பாலாஜி.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி ‘பிக் பாஸ் 2’. இரண்டாவது சீஸனாக கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி வருகிறார். அனந்த் வைத்யநாதன், மஹத், பாலாஜி, டேனியல், ஜனனி, ரித்விகா, என்.எஸ்.கே.ரம்யா, நித்யா, பொன்னம்பலம், ஷாரிக் ஹாசன், வைஷ்ணவி, மமதி சாரி, சென்றாயன், ஐஸ்வர்யா தத்தா, யாஷிகா ஆனந்த், மும்தாஸ் ஆகிய 16 பேரும் போட்டியாளர்களாகக் கலந்து கொண்டனர்.
இதில், மமதி சாரி, அனந்த் வைத்யநாதன், நித்யா, என்.எஸ்.கே.ரம்யா, வைஷ்ணவி, ஷாரிக் ஹாசன், பொன்னம்பலம், மஹத் ஆகிய 8 பேரும் போட்டியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். விஜயலட்சுமி, புதிய போட்டியாளராக ‘பிக் பாஸ்’ வீட்டுக்குள் சென்றுள்ளார்.
இந்நிலையில், பாலாஜியின் மனைவி நித்யா மற்றும் மகள் போஷிகாவிடம் இருந்து பாலாஜிக்கு ஒரு கிஃப்ட் பார்சல் வந்தது. அதைப் பிரித்துப் பார்த்தால், ஒரு குழந்தை பொம்மையுடன், ‘அன்புள்ள அப்பா, ஆல் த பெஸ்ட். வெற்றி பெற்று வாருங்கள்’ என போஷிகாவின் வாழ்த்து இருந்தது.
இன்னொரு அட்டையில், ‘அன்புள்ள பாலாஜி, நீ நன்றாக இருக்கிறாய் என நம்புகிறேன். தயவுசெய்து யாரைப் பற்றியும், அவர்கள் முதுகுக்குப் பின்னால் பேசாதே. நான் இன்னும் உன் பக்கம் நிற்கிறேன். ஒரு தோழியாக என் ஆதரவு உனக்கு உண்டு, தோழியாக மட்டுமே’ என எழுதி அனுப்பியுள்ளார் நித்யா.
நித்யா எழுதியதை ஜனனி எல்லோருக்கும் படித்துக் காட்ட, அதைக் கேட்ட பாலாஜியின் கண்களில் இருந்து கண்ணீர் வழிகிறது. அவரை டேனியல் தேற்றுகிறார். அங்கு என்ன நடந்தது என்பதை இன்றைய நிகழ்ச்சியில் விரிவாகப் பார்க்கலாம்.
முக்கிய செய்திகள்
இந்தியா
49 mins ago
வணிகம்
1 hour ago
விளையாட்டு
2 hours ago
இணைப்பிதழ்கள்
2 hours ago
க்ரைம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
உலகம்
4 hours ago
இந்தியா
5 hours ago
சினிமா
4 hours ago
விளையாட்டு
5 hours ago