’கடல்புறா’வின் காதலி

By செய்திப்பிரிவு

பெப்பர்ஸ் தொலைக்காட்சியில் ‘ஃபிலிம் நியூஸ்’,  வேந்தர் தொலைக்காட்சியில் ‘டக்குன்னு சொல்லுங்க’ ஆகிய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் அஞ்சலியின் நீண்ட நாள் கனவு, செய்தி வாசிப்பாளராவது. அந்த கனவு நனவானதில், தற்போது மிகவும் உற்சாகமாக இருக்கிறார் அஞ்சலி.

‘‘நான் அதிகம் பேசுவேன். எங்கே போனாலும் வாயாடி அஞ்சலின்னுதான் கூப்பிடுவாங்க. அதுதான் இப்போ தொகுப்பாளினி என்ற அந்தஸ்தை எனக்கு சூட்டியிருக்கிறது. கல்லூரி படிப்பை முடித்ததும் சேனலில் செய்தி வாசிப்பாளராக வரணும்னுதான் விருப்பம். அப்படியே திசை மாறி தொகுப்பாளினி ஆகிட்டேன். எந்த ஒரு விஷயத்தை அடையணும்னு நாம தீவிரமா இருக்கோமோ, அதில் தொடர்ச்சியாக முயற்சி இருந்தா நிச்சயம் ஒருநாள் கிடைச்சே தீரும் என்று சொல்வாங்க. அப்படித்தான் இப்போ வேந்தர் சேனல்ல செய்தி வாசிப்பாளர் ஆகியிருக்கேன். சேனல்ல இது மட்டும்தான் எனது எல்லை. இதைத் தாண்டி போகும் எண்ணம் இல்லை. சினிமா, சீரியல் நடிப்பு பக்கமெல்லாம் என்னை யாரும் அழைக்கக்கூடாது. நேரம் கிடைக்கும்போது புத்தகம் படிப்பேன். அதுவும் சாண்டில்யன் எழுதிய ‘கடல்புறா’ என்றால் எனக்கு உயிர்’’ என்கிறார் அஞ்சலி.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

7 hours ago

விளையாட்டு

9 hours ago

இந்தியா

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

ஜோதிடம்

10 hours ago

ஜோதிடம்

10 hours ago

ஜோதிடம்

10 hours ago

மேலும்