பொன்னம்பலத்தை சிறையில் அடைத்த பஞ்சாயத்து நேற்று பூதாகரமாக வெடித்தது.
பொன்னம்பலத்தை சிறையில் அடைப்பதை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்பதில் கிட்டத்தட்ட வீட்டில் உள்ள அனைவரும் உறுதியாக இருந்தார்கள். ’யாஷிகாவும் ஐஸ்வர்யாவுமே கூட கேமரா முன்பு வந்து அவருக்கு பதில் எங்களை சிறையில் அடையுங்கள்’ என்று பேசினார்கள்.
பிக் பாஸிடமிருந்து ஒரு அறிவிப்பு வந்தது. அதில் ‘பொன்னம்பலம் சிறைக்குச் சென்றே ஆகவேண்டும்’என்றும் இல்லையென்றால் லக்சுரி பட்ஜெட் பாதிக்கப்படும் என்றும் குறிப்பிடப்படிருந்தது. பொன்னம்பலம் சிறை போன்று அமைக்கப்பட்டிருந்த அந்த அறையில் சென்று அமர்ந்தார்.
சிறிது நேரம் கழித்து மீண்டும் பிரச்சினை புகையத் தொடங்கியது.
”நேற்று என்ன நடந்தது தெரியுமா? என்று தொலைக்காட்சி முன்பும் கமல் முன்பும் எப்படி சொல்லலாம். நாங்கள் பேசிக் கொண்டு தானே இருந்தோம். என்ன நடந்தது தெரியுமா என்று கேட்டால் பார்க்கும் மக்கள் என்ன நினைப்பார்கள்” என்று ஐஸ்வர்யா பொன்னம்பலத்திடம் கேட்டுக் கொண்டிருந்தார்.
ஒரு நீண்ட விவாதத்துக்குப் பிறகு பொன்னம்பலம் “பேசிக் கொண்டுதான் இருந்தார்கள்”என்று ஒப்புக் கொள்கிறார். இதை அவர் கமல் கேட்கும்போதே சொல்லியிருக்கலாம்.
வீட்டில் உள்ள மற்றவர்களும் “முன்னாடியே தெளிவாக சொல்லியிருக்கலாமே” என்று பொன்னம்பலத்திடம் வருத்தப்பட்டார்கள்.
வைஷ்ணவி “இப்படி அரைகுறையாக நீங்கள் சொன்னதால் அவர்கள் தவறான செய்கையில் ஈடுபட்டதாக நாங்கள் நினைத்தோம். பார்க்கும் மக்களுமே அப்படித்தான் நினைத்திருப்பார்கள்” என்று பொன்னம்பலத்திடம் கடிந்து கொண்டார்.
”நான் உங்களை சித்தப்பா என்று அழைத்தேன். ஆனால் இத்தனை கோடி மக்கள் பார்க்கும் ஒரு தொலைக்காட்சியில் என்னை அசிங்கப்படுத்தி விட்டீர்கள்” என்று ஐஸ்வர்யா கூறியதிலும் நியாயம் இருக்கத்தான் செய்தது.
ஒரு வழியாக பஞ்சாயத்து முடிந்து விளக்குகள் அணைக்கப்பட்டன.
காலையில் போடப்பட்ட சொப்பனசுந்தரி பாடலுக்கு முந்தைய இரவில் எதுவுமே நடக்காதது போல அனைவரும் நடனமாடியது தான் ஹைலைட்.
பொன்னம்பலத்தை ரிலீஸ் செய்யலாம் என்று பிக் பாஸிடமிருந்து அறிவிப்பு வந்தது. அவரது உடல்நிலையைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கலாம்.
அடுத்த தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான டாஸ்க் பற்றிய அறிவிப்பை வைஷ்ணவி மூலம் வெளியிட்டார் பிக் பாஸ். அதாவது வீட்டில் உள்ள அனைவருக்கும் ஆளுக்கு ஒரு தண்ணீர் நிரம்பிய கோப்பை கொடுக்கப்படும். அதில் உள்ள நீர் கீழே சிந்தாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். யார் வேண்டுமானாலும் அடுத்தவரின் கோப்பையைத் தட்டி விடவும் செய்யலாம், பாதுகாக்கவும் செய்யலாம். இறுதியில் யாருடைய கோப்பையில் தண்ணீர் உள்ளதோ அவரே இந்த வாரத் தலைவர்.
இறுதியாக வென்றவர் ரம்யா.
இந்த எலிமினேஷன் படலம் தொடங்கியது. இந்த முறை வீட்டில் உள்ளவர்களை தனித்தனியாக அழைக்காமல் குழுக்களாக அழைத்து அந்தக் குழுவில் உள்ளவர்களையே நாமினேட் செய்ய சொன்னார் பிக் பாஸ். அதன்படி இந்த வாரம் நாமினேட் ஆனவர்கள் யாஷிகா, பொன்னம்பலம், நித்யா, பாலாஜி.
இந்த முறை பொன்னம்பலம் காப்பாற்றப்படுவார் என்றே தோன்றுகிறது. மீதியிருக்கும் மூவரில் யார் எலிமினேட் ஆவார்கள் என்பது வார இறுதியில் தான் தெரியும்.
(தொடரும்)
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 hour ago
சினிமா
2 hours ago
இந்தியா
2 hours ago
தமிழகம்
3 hours ago
விளையாட்டு
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
தமிழகம்
4 hours ago
வாழ்வியல்
4 hours ago
தமிழகம்
5 hours ago
ஆன்மிகம்
4 hours ago
கருத்துப் பேழை
5 hours ago