‘பிக் பாஸ் 2’ போட்டியாளர்களில் ஒருவராக கஸ்தூரி இருப்பதாக வெளியான தகவலுக்கு அவர் மறுப்பு தெரிவித்திருக்கிறார்.
விஜய் டிவியில் கடந்த வருடம் ஒளிபரப்பான நிகழ்ச்சி ‘பிக் பாஸ்’. டிவி, செல்போன், பத்திரிகை என எந்த வெளியுலகத் தொடர்பும் இல்லாமல், 100 நாட்கள் ஒரு வீட்டுக்குள் இருப்பதுதான் இந்த நிகழ்ச்சியின் போட்டி. அத்துடன், வீட்டுக்குள்ளேயே பல போட்டிகளும் நடத்தப்படும். இந்நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார்.
அதே போன்று ‘பிக் பாஸ் சீஸன் 2’ இந்தாண்டு தொடங்கவுள்ளார்கள். இதற்கான அரங்குகள் அமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. தனது கட்சிப் பணிகளுக்கு இடையே, இந்நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்க முடிவு செய்திருக்கிறார் கமல்.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் என்று பல பெயர்கள் கொண்ட பட்டியல் இணையத்தில் வெளியானது. இதில் கஸ்தூரியின் பெயரும் இடம்பெற்றிருந்தது. இதனால் அவர் கலந்து கொள்ளவுள்ளார் என தகவல் பரவியது.
இது குறித்து கஸ்தூரி “பிக் பாஸ் தொடர்பாக என்னை யாரும் தொடர்பு கொள்ளவில்லை. அவர்கள் என்னைத் தொடர்பு கொண்டாலும், நான் பங்கேற்க மாட்டேன். ஏனென்றால் என் லிட்டில் பாஸ் இருக்கிறான்” என்று தனது மகனின் புகைப்படத்தைப் பகிர்ந்து ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
ஜோதிடம்
3 hours ago
ஜோதிடம்
3 hours ago
விளையாட்டு
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
விளையாட்டு
10 hours ago
இந்தியா
11 hours ago
விளையாட்டு
12 hours ago
இந்தியா
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago