“பிரதமரே... இப்போதாவது உங்கள் மவுனத்தைக் கலையுங்கள்” - விஷால் வேண்டுகோள்

By செய்திப்பிரிவு

‘பிரதமரே... தயவுசெய்து இப்போதாவது உங்கள் மவுனத்தைக் கலையுங்கள்’ என நடிகர் விஷால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடிய மக்கள் மீது தடியடி நடத்திய காவல்துறை, கண்ணீர்ப் புகைக் குண்டுகளையும் வீசியதுடன், துப்பாக்கிச் சூடும் நடத்தியது. இந்த வன்முறையில் இதுவரை 9 பேர் பலியாகியுள்ளனர். பலர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தென்னிந்திய நடிகர் சங்கப் பொதுச் செயலாளரும், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவருமான விஷால், “தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தின்போது அப்பாவிப் பொதுமக்கள் மீது மிருகத்தனமாகத் தாக்குதல் நடத்தியதை வன்மையாகக் கண்டிக்கிறேன். துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள். இந்தப் போராட்டம் சமூக நலனுக்காக நடந்ததேயன்றி, சொந்த நலனுக்காக அல்ல.

50 ஆயிரம் பேர் ஸ்டெர்லைட்டுக்கு எதிராகப் போராடுவது என்பது, தூத்துக்குடி மக்களின் நலனுக்கு எதிராக இருப்பதை மிகப்பெரிய மக்கள் கூட்டம் ஒன்று சேர்ந்து எதிர்க்கிறது. அன்பான பிரதமரே... தயவுசெய்து இப்போதாவது உங்கள் மவுனத்தைக் கலையுங்கள். ‘போராட்டம் என்பது ஜனநாயகத்தின் வடிவம்’ என பாஜக கூறியிருக்கிறது. அதையே மக்கள் ஏன் செய்யக்கூடாது? அரசு என்பது மக்களுக்காக இருக்க வேண்டும், மற்றவர்களுக்காக இருக்கக்கூடாது. 2019-ல் எச்சரிக்கையாக இருங்கள்” என ட்விட்டரில் தெரிவித்துள்ளார் விஷால்.

இதை மிஸ் பண்ணிடாதீங்க...

“வரலாற்றுப் பிழை செய்து விட்டீர்கள்” - ஜீ.வி.பிரகாஷ் குற்றச்சாட்டு

“தூத்துக்குடி வன்முறை மற்றும் உயிர் இழப்புகளுக்குத் தமிழக அரசே பொறுப்பு” - ரஜினிகாந்த்

‘தீயை நிறுத்துங்கள்; தீர்வு காணுங்கள்’ - கவிஞர் வைரமுத்து கோரிக்கை

தமிழினம் ஒருபோதும் வேடிக்கை பார்க்காது: ஸ்டெர்லைட் போராட்டத்தில் கைதான வ.கவுதமன் பேட்டி

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

விளையாட்டு

4 hours ago

இந்தியா

5 hours ago

வணிகம்

6 hours ago

விளையாட்டு

6 hours ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

க்ரைம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

உலகம்

9 hours ago

இந்தியா

10 hours ago

மேலும்