‘எனது திரையுலக வாழ்க்கையில் ‘இரும்புத்திரை’தான் மிகவும் சர்ச்சைக்குரிய திரைப்படம்’ என விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.
அறிமுக இயக்குநர் மித்ரன் இயக்கத்தில் விஷால் நாயகனாக நடித்துள்ள படம் ‘இரும்புத்திரை’. அர்ஜுன், சமந்தா, ரோபோ சங்கர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இப்படத்துக்கு யுவன் இசையமைத்திருக்கிறார். விஷால் ஃபிலிம் ஃபேக்டரி தயாரித்திருக்கும் இப்படம், மே 11-ம் தேதி வெளியாக இருக்கிறது.
பலமுறை வெளியீடு ஒத்திவைக்கப்பட்டு, இப்போது வெளியாக இருப்பதால் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. மேலும், இப்படத்தின் முதல் பாதியை பிரத்யேகமாக பத்திரிகையாளர்களுக்கு மட்டும் இன்று (மே 9) திரையிட்டுக் காட்டவுள்ளார்.
இந்நிலையில், ‘இரும்புத்திரை’ படத்தின் கதைக்களம் குறித்து விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில், “ஆம். எனது திரையுலக வாழ்க்கையில் ‘இரும்புத்திரை’தான் மிகவும் சர்ச்சைக்குரிய திரைப்படம். கருத்துச் சுதந்திரம் என்று பேசுவதுதான் இப்படத்திலுள்ள விஷயம்.
நாம் தற்கால சமுதாயத்தில் மிகவும் முக்கியமான ஒரு பிரச்சினை குறித்து, என்னுடைய கோபத்தை வெளியிப்படுத்த உதவிய இயக்குநர் மித்ரனுக்கு மிகுந்த நன்றி” என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
‘இரும்புத்திரை’ வெளியானவுடன் லிங்குசாமி இயக்கத்தில் நடித்துவரும் ‘சண்டக்கோழி 2’ படத்தில் கவனம் செலுத்த முடிவு செய்திருக்கிறார் விஷால்.
இதை மிஸ் பண்ணிடாதீங்க...
விஷால், சமந்தா நடிப்பில் ‘இரும்புத்திரை’ படத்தின் புகைப்படங்கள்
“சமூகத்தின் குரலுக்கான படமாக ‘டிராஃபிக் ராமசாமி’ இருக்கும் என்று நம்புகிறேன்” - சகாயம் ஐஏஎஸ்
'விசுவாசம்' படப்பிடிப்பு படங்கள் வெளியானதால் படக்குழு அதிர்ச்சி
முக்கிய செய்திகள்
விளையாட்டு
12 mins ago
இந்தியா
1 hour ago
வணிகம்
1 hour ago
விளையாட்டு
2 hours ago
இணைப்பிதழ்கள்
2 hours ago
க்ரைம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
உலகம்
4 hours ago
இந்தியா
6 hours ago
சினிமா
5 hours ago