‘சலீம்’ படத்தின் இயக்குநர் நிர்மல் குமார் இயக்கத்தில் அடுத்து நடிக்க இருக்கிறார் விக்ரம் பிரபு.
விஜய் ஆண்டனி நடித்த ‘சலீம்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் நிர்மல் குமார். அடுத்ததாக ‘சதுரங்க வேட்டை 2’ படத்தை இயக்கியுள்ளார். அரவிந்த் சாமி - த்ரிஷா நடித்துள்ள இந்தப் படத்தை, மனோபாலா தயாரித்துள்ளார். படம் தயாராகி நீண்ட நாட்கள் ஆனாலும், பைனான்ஸ் பிரச்சினையால் ரிலீஸாகாமல் இருக்கிறது.
இந்நிலையில், தன்னுடைய அடுத்த படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார் நிர்மல் குமார். இந்தப் படத்தில், விக்ரம் பிரபு ஹீரோவாக நடிக்கிறார். ஆக்ஷன் த்ரில்லராக உருவாக இருக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு, ஜூலை முதல் வாரத்தில் தொடங்க இருக்கிறது. சென்னை மற்றும் மும்பையில் படப்பிடிப்பை நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.
விக்ரம் பிரபு தற்போது தினேஷ் செல்வராஜ் இயக்கத்தில், ஹன்சிகா ஜோடியாக ‘துப்பாக்கி முனை’ படத்திலும், ராஜ்தீப் இயக்கத்தில் ‘அசுர குரு’ படத்திலும் நடித்து வருகிறார். இந்த இரு படங்களையும் இந்த வருடத்துக்குள் ரிலீஸ் செய்யத் திட்டமிட்டு வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
2 hours ago
ஜோதிடம்
3 hours ago
விளையாட்டு
6 hours ago
விளையாட்டு
8 hours ago
இந்தியா
9 hours ago
வணிகம்
10 hours ago
விளையாட்டு
10 hours ago
இணைப்பிதழ்கள்
10 hours ago
க்ரைம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago