‘ஜெயலலிதா வேடத்தில் நான் நடிக்கவில்லை’ என கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார்.
கீர்த்தி சுரேஷ் நடிப்பில் கடந்த வாரம் ரிலீஸான படம் ‘நடிகையர் திலகம்’. பழம்பெரும் நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது. நாக் அஸ்வின் இயக்கியுள்ள இந்தப் படத்தில், சாவித்ரி வேடத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். ‘மகாநடி’ என்ற பெயரில் தெலுங்கிலும் இந்தப் படம் ரிலீஸாகியிருக்கிறது.
தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளிலுமே இந்தப் படம் ஹிட்டாகியிருக்கிறது. சாவித்ரி போலவே நடித்திருப்பதாகப் பலரிடம் இருந்தும் கீர்த்தி சுரேஷுக்குப் பாராட்டுகள் குவிகின்றன. எனவே, ஏழுமலையானைத் தரிசிப்பதற்காக இன்று காலை திருப்பதி வந்தார் கீர்த்தி சுரேஷ்.
சாமி தரிசனத்துக்குப் பிறகு பத்திரிகையாளர்களிடம் பேசிய அவர், “நீண்ட நாட்களாக இங்கு வரவேண்டும் என நினைத்தேன். ஆனால், தொடர்ச்சியான ஷூட்டிங்கால் வர முடியவில்லை. இப்போதுதான் இங்கு வருவதற்கு நேரம் கிடைத்தது. ரொம்ப ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. படம் வெற்றியடைந்திருப்பதில் மகிழ்ச்சி.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றில் நான் நடிக்கப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால், நான் அப்படி எந்தப் படத்திலும் நடிக்கவில்லை. அதுமட்டுமல்ல, வேறு யாருடைய வாழ்க்கை வரலாற்றிலும் நான் நடிக்கவில்லை. இப்போதைக்கு ‘நடிகையர் திலகம்’ மட்டும்தான்.
படம் பற்றிக் கேள்விப்பட்ட கமல் சார், நேரில் அழைத்து என்னைப் பாராட்டினார். அவர் இன்னும் படம் பார்க்கவில்லை. விரைவில் பார்ப்பதாகச் சொல்லியிருக்கிறார். அவருடன் இணைந்து நடிப்பது குறித்து இப்போது எதுவும் சொல்வதற்கு இல்லை” எனத் தெரிவித்தார்.
இதை மிஸ் பண்ணிடாதீங்க...
திரை விமர்சனம்: நடிகையர் திலகம்
மீண்டும் அதே தயாரிப்பு நிறுவனத்துக்கு கால்ஷீட் கொடுத்த அஜித்
கேன்ஸ் திரைப்பட விழாவில் பரபரப்பு: தன்னைத்தானே இரும்புக் கூண்டுக்குள் அடைத்துக்கொண்ட மல்லிகா ஷெராவத்
முக்கிய செய்திகள்
தமிழகம்
24 mins ago
விளையாட்டு
3 hours ago
இந்தியா
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
இந்தியா
4 hours ago
க்ரைம்
5 hours ago
இந்தியா
5 hours ago
க்ரைம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
இந்தியா
7 hours ago