‘காலா’ படத்துக்குத் தடைகோரிய வழக்கு தள்ளுபடி

By செய்திப்பிரிவு

‘காலா’ படத்துக்குத் தடைகோரிய வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.

பா.ரஞ்சித் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘காலா’. இந்தப் படத்துக்கு ‘கரிகாலன்’ என டேக்லைன் வைக்கப்பட்டுள்ளது. ‘கரிகாலன்’ என்ற தலைப்பும், அதன் மூலக்கருவும் தன்னுடையது; இந்தப் பெயரை தென்னிந்திய வர்த்தக சபையிலும் பதிவு செய்துள்ளேன் என்று கூறி சென்னையைச் சேர்ந்த ராஜசேகரன் என்பவர் கடந்த வருடம் மே மாதம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதி இளங்கோவன், இதுகுறித்து ரஜினிகாந்த், பா.ரஞ்சித், தனுஷின் வுண்டர்பார் ஃபிலிம்ஸ், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டார். அவர்களும் தங்கள் விளக்கத்தை அளித்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கு இன்று நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, தடைகோரிய மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

33 mins ago

சினிமா

3 hours ago

இந்தியா

42 mins ago

இந்தியா

49 mins ago

இந்தியா

55 mins ago

இந்தியா

1 hour ago

சினிமா

4 hours ago

இந்தியா

1 hour ago

கருத்துப் பேழை

3 hours ago

தமிழகம்

1 hour ago

ஜோதிடம்

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

மேலும்