ஜப்பானில் ரஜினி படம் நிகழ்த்திய சாதனையை, இதுவரை வேறெந்தப் படத்தாலும் முறியடிக்க முடியவில்லை.
ஆயிரம் கோடிக்கு மேல் வசூல் செய்த முதல் இந்தியப் படம் என்ற சாதனையைப் பெற்றுள்ளது ‘பாகுபலி 2’. எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கிய இந்தப் படத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சத்யராஜ், நாசர், ரோகிணி ஆகியோர் நடித்துள்ளனர்.
கடந்த வருடம் ரிலீஸான இந்தப் படத்துக்கு, சிறந்த வெகுஜன திரைப்படம், சிறந்த சண்டைப் பயிற்சி இயக்குநர் மற்றும் சிறந்த ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் என மூன்று தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
உலகம் முழுவதும் பல்வேறு மொழிகளில் ரிலீஸான ‘பாகுபலி 2’, கடந்த வருடம் டிசம்பர் மாதம் 29 ஆம் தேதி ஜப்பானில் ரிலீஸானது. 100 நாட்களில் 1.3 மில்லியன் டாலர்களை வசூலித்த இந்தப் படம், இன்னும் அங்கு ஓடிக் கொண்டிருக்கிறது. இதனால், ஜப்பானில் அதிகம் வசூல் செய்த இந்தியப் படங்களின் வரிசையில், ‘பாகுபலி 2’வுக்கு மூன்றாவது இடம் கிடைத்துள்ளது.
ரஜினியின் நடிப்பில் வெளியான ‘முத்து’ (டேன்சிங் மகாராஜா’ படம் தான், இப்போதும் முதலிடத்தில் இருக்கிறது. அப்போதே 180 நாட்கள் ஓடி, 1.6 மில்லியன் டாலர்களை வசூலித்தது. இந்தச் சாதனையை, இதுவரை யாராலும் முறியடிக்க முடியவில்லை. அமீர்கானின் ‘3 இடியட்ஸ்’ படம், 1.48 மில்லியன் டாலர்களை வசூலித்து இரண்டாம் இடத்தில் இருக்கிறது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
5 mins ago
தமிழகம்
13 mins ago
உலகம்
15 mins ago
தமிழகம்
42 mins ago
சினிமா
30 mins ago
தமிழகம்
52 mins ago
இந்தியா
50 mins ago
வாழ்வியல்
1 hour ago
சுற்றுலா
1 hour ago
வணிகம்
7 hours ago
இந்தியா
1 hour ago
சினிமா
1 hour ago