தனுஷ் இயக்கத்தில் உருவாகவுள்ள புதிய படத்தில் நாகார்ஜுனா நடிக்க பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டு இருக்கிறது.
'ப.பாண்டி' படத்தைத் தொடர்ந்து, தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கவுள்ள புதிய படத்தை தனுஷ் இயக்கி, நடிக்கவுள்ளார். இதன் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் தொடங்கவுள்ளது. இதற்கான முதற்கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தில் தனுஷுடன் நாகார்ஜுனாவை நடிக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது படக்குழு.
"முதலில் சிரஞ்சீவியை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தினோம். ஆனால், அவர் தற்போது நடித்து வரும் புதிய படத்தின் படப்பிடிப்பு நீண்ட நாட்கள் நடைபெறவுள்ளதால், அவரால் உடனடியாக தேதிகள் ஒதுக்க இயலவில்லை. ஆகையால் நாகார்ஜுனா நடிக்கவைக்க பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டுள்ளது. விரைவில் அவர் ஒப்பந்தம் செய்யப்படுவார்" என்று படக்குழுவினர் சார்பில் தெரிவித்தார்கள்.
சமீபத்தில் கார்த்தியுடன் இணைந்து 'தோழா' படத்தில் நடித்தார் நாகார்ஜுனா. அதனைத் தொடர்ந்து தனுஷுடன் நடிக்கவுள்ளார். இப்படம் தமிழ் - தெலுங்கு என இருமொழிகளிலும் உருவாக்க படக்குழு திட்டமிட்டு இருக்கிறது.
தற்போது பாலாஜி மோகன் இயக்கத்தில் உருவாகும் 'மாரி 2' படத்தில் சாய் பல்லவி, ரோபோ சங்கர் ஆகியோருடன் நடித்து வருகிறார் தனுஷ். இதன் படப்பிடிப்பு தென்காசியைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வருகிறது. அதனைத் தொடர்ந்து தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கவுள்ள படத்தில் கவனம் செலுத்தவுள்ளார் தனுஷ்.
முக்கிய செய்திகள்
வணிகம்
45 mins ago
விளையாட்டு
1 hour ago
தொழில்நுட்பம்
2 hours ago
சினிமா
3 hours ago
க்ரைம்
3 hours ago
விளையாட்டு
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
இந்தியா
4 hours ago
க்ரைம்
4 hours ago
சுற்றுச்சூழல்
4 hours ago