தில்லுக்கு துட்டு 2-ம் பாகத்திற்கான பேச்சுவார்த்தை தொடக்கம்

By ஸ்கிரீனன்

சந்தானம் நடிப்பில் வெளியான 'தில்லுக்கு துட்டு' படத்தின் 2-ம் பாகத்திற்கான பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் சந்தானம் நடிப்பில் வெளியான 'சக்க போடு போடு ராஜா' படம் படுதோல்வி அடைந்தது. அதனைத் தொடர்ந்து செல்வராகவன் இயக்கத்தில் உருவாகி வந்த 'மன்னவன் வந்தானடி' படமும் பைனான்ஸ் பிரச்சினையில் நிற்கிறது.

தற்போது ராஜேஷ் இயக்கத்தில் சந்தானம் நடிக்கவுள்ள படத்திற்கான முதற்கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதனிடையே 'தில்லுக்கு துட்டு' படத்தின் 2-ம் பாகத்தில் நடிக்க முடிவு செய்து, பேச்சுவார்த்தையைத் தொடங்கியிருக்கிறார் சந்தானம்.

ராம்பாலா இயக்கத்தில் சந்தானம், சஹான்யா, கருணாஸ், ஆனந்த்ராஜ், ராஜேந்திரன், மயில்சாமி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'தில்லுக்கு துட்டு'. வசூல் ரீதியில் பெரும் வரவேற்பைப் பெற்ற படம் என்பதால் இதன் 2-ம் பாகத்தை தயார் செய்யுமாறு ராம்பாலாவிடம் தெரிவித்திருக்கிறார் சந்தானம்.

ராம்பாலா - சந்தானம் இருவருமே 'லொள்ளு சபா' நிகழ்ச்சியிலிருந்தே நெருங்கிய நண்பர்களாக வலம்வருவது குறிப்பிடத்தக்கது. தற்போது கயல்சந்திரன் நடித்துவரும் 'டாவு' படத்தை இயக்கி வருகிறார் ராம்பாலா. அதற்கு பிறகு 'தில்லுக்கு துட்டு 2'வில் கவனம் செலுத்துவார் என தெரிகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

31 mins ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

வாழ்வியல்

3 hours ago

ஜோதிடம்

4 hours ago

க்ரைம்

4 hours ago

இந்தியா

4 hours ago

மேலும்