சென்னை: தனுஷ் இயக்கி நடிக்கும் ‘டி50’ படத்தின் முதல் தோற்றம் வரும் 19-ம் தேதி வெளியிடப்படும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தனுஷின் 50-வது படமாக உருவாகும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்தில், துஷாரா விஜயன், சந்தீப் கிஷன், எஸ்.ஜே.சூர்யா, அபர்ணா பாலமுரளி ஆகியோர் நடிக்கின்றனர். வட சென்னையை களமாக கொண்டு உருவாகும் இப்படத்துக்கு ‘ராயன்’ என பெயரிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த டிசம்பர் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக தனுஷ் தனது எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், பிப்ரவரி 19-ம் தேதி இப்படத்தின் முதல் தோற்றம் வெளியிடப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பில் ரத்தம் வழிய தனுஷ் பின்புறமாக நின்றுகொண்டிருக்கும் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. படம் தற்போது தமிழ் சினிமா ட்ரெண்டிங்கான, ரத்தமும், சதையுமாக உருவாகியுள்ளதாக தெரிகிறது.
முதல் தோற்றத்தில் படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட உள்ளது. முன்னதாக, தனுஷ் இயக்கத்தில் வெளியான ‘பவர் பாண்டி’ ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. ‘டி50’ தனுஷ் இயக்கும் இரண்டாவது படம் என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
15 mins ago
தமிழகம்
7 mins ago
இந்தியா
41 mins ago
விளையாட்டு
34 mins ago
இணைப்பிதழ்கள்
7 hours ago
தமிழகம்
53 mins ago
மாவட்டங்கள்
1 hour ago
இணைப்பிதழ்கள்
5 hours ago
இணைப்பிதழ்கள்
6 hours ago
விளையாட்டு
1 hour ago
சினிமா
1 hour ago
தமிழகம்
1 hour ago