இறுதிக்கட்டப் படப்பிடிப்பை எட்டியுள்ள நடிகையர் திலகம்

By செய்திப்பிரிவு

கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகிவரும் 'நடிகையர் திலகம்' திரைப்படம் இறுதிக்கட்டப் படப்பிடிப்பை எட்டியுள்ளது.

நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றை முன்வைத்து தமிழ் - தெலுங்கு என இரு மொழிகளிலும் உருவாகி வரும் படத்தில் நடித்து கீர்த்தி சுரேஷ். பெரும் பொருட்செலவில் உருவாகி வரும் இப்படத்துக்கு தமிழில் 'நடிகையர் திலகம்', தெலுங்கில் 'மகாநதி' என பெயரிட்டு இருக்கிறார்கள்.

நீண்ட நாட்களாக இதன் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் பிரம்மாண்டமான அரங்குகள் அமைத்து நடத்தி வந்தார்கள். தற்போது, இதன் இறுதிகட்டப் படப்பிடிப்பை எட்டியுள்ளது படக்குழு. இன்னும் சில பேட்ச் வொர்க் எனப்படும் சிறுகாட்சிகளே படமாக்க வேண்டியதிருப்பதாக தெரிவித்தார்கள்.

சாவித்திரியாக கீர்த்தி சுரேஷ், ஜெமினி கணேசனாக துல்கர் சல்மான், பத்திரிகையாளராக சமந்தா மற்றும் சாவித்திரியுடன் நடித்த நடிகர்களாக பல்வேறு முன்னணி நடிகர்களும் இதில் நடித்து வருகிறார்கள். 'யவடு சுப்பிரமணியம்' படத்தின் இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கி வருகிறார். விஜயந்தி மூவிஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் இப்படத்தை தயாரித்து வருகிறது. மார்ச் மாத இறுதியில் வெளியிட முடிவு செய்திருக்கிறார்கள்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சுற்றுச்சூழல்

12 mins ago

தமிழகம்

12 mins ago

சுற்றுலா

27 mins ago

வாழ்வியல்

28 mins ago

வாழ்வியல்

37 mins ago

தமிழகம்

48 mins ago

தமிழகம்

52 mins ago

சுற்றுச்சூழல்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்