சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் 'நாடோடிகள் 2' உருவாக உள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி மாதம் தொடங்க உள்ளது.
சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார், விஜய் வசந்த், தரணி, அனன்யா நடிப்பில் உருவான படம் 'நாடோடிகள்'. தமிழ் சினிமாவில் நட்புக்கு புது இலக்கணம் வகுத்துக் கொடுத்த படம் என்று இன்றளவும் கொண்டாடப்பட்டு வரும் படமாக 'நாடோடிகள் உள்ளது'. சசிகுமார், சமுத்திரக்கனி ஆகிய இருவருக்கும் தனி அடையாளத்தை, அங்கீகாரத்தை இப்படம் வழங்கியது.
விமர்சன ரீதியிலும், வசூல் ரீதியிலும் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்ற 'நாடோடிகள்' படத்தின் அடுத்த பாகம் இப்போது தயாராக உள்ளது. 'நாடோடிகள் 2' படத்தை உருவாக்க சமுத்திரக்கனி திட்டமிட்டுள்ளார்.
சசிகுமார் இதில் நாயகனாக நடிக்கிறார். படத்தை இயக்குவதோடு, தயாரிப்பிலும் சமுத்திரக்கனியே ஈடுபடுகிறார். விரைவில் படக்குழு தொடர்பான விவரங்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படப்பிடிப்பு பிப்ரவரி மாதம் தொடங்குகிறது.
'நாடோடிகள்', 'போராளி' ஆகிய படங்களில் இணைந்து வெற்றியைக் கொடுத்த சமுத்திரக்கனி - சசிகுமார் கூட்டணி தற்போது மூன்றாவது முறையாக இணைந்துள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 min ago
ஜோதிடம்
2 hours ago
ஜோதிடம்
2 hours ago
விளையாட்டு
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
விளையாட்டு
9 hours ago
இந்தியா
10 hours ago
விளையாட்டு
11 hours ago
இந்தியா
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago