இயக்குநர் பாலசந்தர் மறைவிற்குப் பிறகு இன்னொரு குருநாதர் எனக்கு கிடைத்திருக்கிறார் என்று இயக்குநரும், நடிகருமான சமுத்திரக்கனி நெகிழ்ச்சியுடன் பேசினார்.
பிரியதர்ஷன் இயக்கத்தில் உதயநிதி, சமுத்திரக்கனி, இயக்குநர் மகேந்திரன் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'நிமிர்'. ஜனவரி 26-ம் தேதி வெளியாக உள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடைபெற்றது. இதில் உதயநிதி, நமீதா பிரமோத், பார்வதி நாயர், கருணாகரன், ஜார்ஜ், சண்முகராஜன், எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இவ்விழாவில் சமுத்திரக்கனி பேசுகையில், '' 'நிமிர்' படத்துக்கு 10 நடிகர்கள் பெயரை பிரியதர்ஷன் சாரிடம் பரிந்துரைத்தேன். அவர்கள் எல்லோரையும் அவர் வேண்டாம் என்று மறுத்துவிட்டார். ஒரு நாள் அவரே உதயநிதி எப்படி இருப்பார் என்று கேட்டார். அத்தோடு நானும் படத்தில் நடிக்க வேண்டும் என்று சொன்னார். வசனமும் என்னை எழுதச் சொன்னார். ஆனால் வசனம் நான் எழுதவில்லை. அவர் தான் உண்மையில் எழுதியிருக்கிறார். பெருந்தன்மையாக என் பெயரைப் போட்டிருக்கிறார்.
இயக்குநர் பாலசந்தர் மறைவிற்குப் பிறகு இன்னொரு குருநாதர் எனக்கு கிடைத்திருக்கிறார். சண்டைக் காட்சிகளில் ராஜசேகர் மாஸ்டர் என்னையும், உதயநிதியையும் ரொம்பவே கஷ்டப்படுத்திவிட்டார்'' என்றார் சமுத்திரக்கனி.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 min ago
ஜோதிடம்
27 mins ago
தமிழகம்
19 mins ago
ஓடிடி களம்
24 mins ago
ஜோதிடம்
54 mins ago
தமிழகம்
49 mins ago
க்ரைம்
29 mins ago
தமிழகம்
41 mins ago
விளையாட்டு
39 mins ago
இந்தியா
58 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago