இதைவிட கரும்புள்ளி இனி ஏது என்று தயாரிப்பாளர் சங்கப் பொதுக்குழு குறித்து விஷாலை கடுமையாகச் சாடியிருக்கிறார் சேரன்.
தயாரிப்பாளர் சங்கத்தின் 10-வது பொதுக்குழு கூட்டத்தில் பெரும் சலசலப்பு ஏற்பட்டதால் பாதியிலேயே முடிக்கப்பட்டது. ஆர்.கே.நகரில் விஷால் சுயேட்சையாக போட்டியிட மனுதாக்கல் செய்ததே இந்த சலசலப்புக்கு காரணம் என்று பலரும் தெரிவித்திருக்கிறார்கள்.
இயக்குநர் சேரன் தொடர்ச்சியாக விஷாலின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளைக் கூறிவந்தார். நேற்றும் தயாரிப்பாளர் சங்கப் பொதுக்குழுவில் சேரன் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் சேரன் கூறியிருப்பதாவது:
நான் இன்று தயாரிப்பாளர் சங்க பொதுக்குழுவில் பேசவே இல்லை. விஷாலை கேள்வி கேட்டவர் எல்லாம் அவருக்கு வாக்களித்து ஏமாந்து நிற்கும் தயாரிப்பாளர்கள். 450 பேர்களை சமாளிக்க தைரியமும், விளக்கம் கொடுக்க பொறுமையும் இல்லாமல் எஸ்கேப் ஆக தேசிய கீதம் பாடிய ஒரே தலைவன் விஷால் தான். இதைவிட கரும்புள்ளி இனி ஏது?
விஷால் விஷயத்தை இதோடு முடிக்கலாம். இங்கு நண்பர்கள் யாரும் அதைப் பற்றி விவாதிக்க வேண்டாம். எனது அன்பு வேண்டுகோள். அடுத்து தவறு செய்யும்போது பேசுவோம்
இவ்வாறு சேரன் தெரிவித்திருக்கிறார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
2 hours ago
சினிமா
2 hours ago
இந்தியா
3 hours ago
தமிழகம்
4 hours ago
விளையாட்டு
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
தமிழகம்
5 hours ago
வாழ்வியல்
5 hours ago
தமிழகம்
5 hours ago
ஆன்மிகம்
5 hours ago
கருத்துப் பேழை
6 hours ago