'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் குற்றச்சாட்டுக்கு சிம்பு பதிலளித்திருக்கிறார்.
'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' திரைப்படம் பெரும் தோல்வியடைந்ததால், சிம்புவின் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் மைக்கேல் ராயப்பன் புகார் அளித்திருக்கிறார். மேலும், சிம்புவின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளையும் தெரிவித்திருக்கிறார். (மைக்கேல் ராயப்பன் புகாரை முழுமையாக தெரிந்து கொள்ள)
இப்பிரச்சினை தொடர்பாக சிம்புவைத் தொடர்பு கொண்டு பேசிய போது:
ஒரு படம் நடித்துக் கொண்டிருக்கும் போது, என் மீது அதன் தயாரிப்பாளர் புகார் கூறினார் என்றால் பதில் சொல்கிறேன். படத்தில் நடித்து, வெளியாகி முடிந்துவிட்டது. நான் யாருக்கும் பதில் சொல்ல வேண்டும் என்ற அவசியமில்லை. அப்படியொரு சட்டமும் இல்லை. என்றைக்குமே என் படத்தின் தயாரிப்பாளரைப் பற்றி தவறாக பேசமாட்டேன். என் மீது நடவடிக்கை எடுக்கப் போகிறார்கள் என்று வந்தால், அப்போது என் பதிலைக் கூறுவேன்.
இவ்வாறு சிம்பு தெரிவித்திருக்கிறார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
8 mins ago
தமிழகம்
19 mins ago
இந்தியா
37 mins ago
இந்தியா
44 mins ago
தமிழகம்
42 mins ago
இந்தியா
44 mins ago
வணிகம்
58 mins ago
இந்தியா
58 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
உலகம்
1 hour ago
சினிமா
4 hours ago