ஆகஸ்ட் 1ம் தேதி முதல் சென்னையில் விஜய், சமந்தா, சதீஷ் பங்குபெறும் 'கத்தி' இறுதிகட்டப் படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது.
விஜய், சமந்தா, சதீஷ் உள்ளிட்ட பலர் நடித்து வரும் 'கத்தி' படத்தை இயக்கி வருகிறார் ஏ.ஆர்.முருகதாஸ். அனிருத் இசையமைத்து வரும் இப்படத்தை தயாரித்து வருகிறது லைக்கா நிறுவனம்.
இப்படத்தை தீபாவளிக்கு வெளியிட இருக்கிறார்கள். ஹரி -விஷால் இணைப்பில் தயாராகி வரும் 'பூஜை' படத்தோடு வெளிவர இருக்கிறது.
இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் முடிவடையவில்லை. இதன் இறுதிகட்டப் படப்பிடிப்பு சென்னையில் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் துவங்க இருக்கிறது. இதில் விஜய், சமந்தா, சதீஷ் உள்ளிட்டவர்கள் கலந்து கொள்ளவிருக்கிறார்கள்.
'அஞ்சான்' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள முடியாமல், விளம்பர நிகழ்ச்சியில் மட்டும் கலந்து கொண்ட சமந்தா, தற்போது மீண்டும் சென்னை திரும்பி இருக்கிறார். இது குறித்து "மீண்டும் சென்னை திரும்பி இருக்கிறேன். விக்ரம் - விஜய் மில்டன் படம் மற்றும் கத்தி. ஹைதராபாத்தை மிஸ் பண்ணுகிறேன்" என்று கூறியுள்ளார்.
இதோடு 'கத்தி' படத்தின் முக்கிய காட்சிகள் அனைத்துm படமாக்கப்பட்டு முடியவிருக்கிறது. இதற்கு பிறகு விஜய், சமந்தா பாடல் காட்சிகள் மட்டுமே பாக்கி இருக்கிறது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
24 mins ago
விளையாட்டு
1 hour ago
இந்தியா
1 hour ago
விளையாட்டு
3 hours ago
இந்தியா
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
ஜோதிடம்
4 hours ago
ஜோதிடம்
4 hours ago
ஜோதிடம்
5 hours ago
வாழ்வியல்
5 hours ago
ஜோதிடம்
5 hours ago