படப்பிடிப்பு முடியும் தருவாயில் ‘ஒரு நல்லநாள் பாத்து சொல்றேன்

By செய்திப்பிரிவு

விஜய் சேதுபதி மற்றும் கவுதம் கார்த்திக் நடிக்கும் 'ஒரு நல்லநாள் பாத்து சொல்றேன்' படத்தின் படப்பிடிப்பு முடியும் தருவாயில் உள்ளது.

ஆறுமுக குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, கவுதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் படம் 'ஒரு நல்லநாள் பாத்து சொல்றேன்'. ஸ்ரீ சரவணன் ஒளிப்பதிவில் உருவாகிவரும் இப்படத்தில் கோவிந்தராஜ் எடிட்டிங் செய்துள்ளார், ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார்.

இது தொடர்பாக படக்குழு சார்பில் விசாரித்த போது, '' 'ஒரு நல்லநாள் பாத்து சொல்றேன்' என்ற தலைப்பு படத்தில் முக்கியமான இடத்தில் வரும். ஆகவே, அதையே தலைப்பாக இறுதி செய்தோம். காமெடி கலந்த ஆக்‌ஷன் கதையாகும். கதை அனைவருக்குமே தெரிந்தது என்றாலும், கதை நடக்கும் களம் மிகவும் புதுமையாக உருவாக்கியுள்ளோம். அடர்ந்த காடுகளுக்குள் படப்பிடிப்பு நடத்தியுள்ளோம்'' என்று படக்குழு கூறியுள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு முடியும் தருவாயில் உள்ளது. நவம்பர் மாதம் இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

49 mins ago

சினிமா

1 hour ago

சுற்றுச்சூழல்

2 hours ago

உலகம்

2 hours ago

வாழ்வியல்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

விளையாட்டு

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

சினிமா

5 hours ago

க்ரைம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்