சென்னை வடபழனியில் உள்ள விஷாலின் தயாரிப்பு நிறுவனத்தில் ஜிஎஸ்டி நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர்.
மத்திய கலால் வரித்துறையின் கீழ் உள்ள ஜிஎஸ்டி நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் விஷாலின் தயாரிப்பு நிறுவனமான விஷால் ஃபிலிம் பேக்டரியில் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். ஒருமணி நேரமாக இந்தச் சோதனை நடைபெற்று வருகிறது.
விஷாலின் தயாரிப்பு நிறுவனம் ஜிஎஸ்டி வரியை முறையாக செலுத்துகிறதா என்பதை ஆய்வு செய்வதற்காகவே இந்தச் சோதனை நடத்தப்படுவதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
ஜிஎஸ்டி நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் கேட்டுக்கொண்டதின் பேரில் விஷால் தரப்பினர் ஆவணங்களைச் சரிபார்க்க வழங்கியதாகக் கூறப்படுகிறது.
இந்த திடீர் சோதனையின் போது விஷாலும், அவரது தயாரிப்பு நிறுவனத்தின் மேலாளரும் அங்கு இல்லை.
இந்நிலையில், பாஜக மற்றும் மத்திய அரசை விஷால் தொடர்ந்து விமர்சித்து வருவதால் இந்தச் சோதனை நடத்தப்பட்டு வருவதாக நடிகர் கருணாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
12 mins ago
ஆன்மிகம்
30 mins ago
தமிழகம்
50 mins ago
தமிழகம்
5 hours ago
இந்தியா
1 hour ago
கருத்துப் பேழை
1 hour ago
தமிழகம்
1 hour ago
வணிகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
வாழ்வியல்
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
7 hours ago