நடிகர் பிருத்விராஜ் இயக்குநராக அறிமுகமான மலையாளப் படம், ‘லூசிஃபர்’. இதில் மோகன்லால், மஞ்சுவாரியர் உட்பட பலர் நடித்திருந்தனர். அரசியல் ஆக்ஷன் த்ரில்லர் படமான இது, 2019ம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டானது. மலையாள சினிமா வரலாற்றில் ரூ.200 கோடி வசூலித்த முதல் படம் என்ற பெருமையை இது பெற்றது.
இதன் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. ரூ.400 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக இந்தப் படத்தை உருவாக்கத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் இந்தப் படத்துக்காக லண்டனில் லொகேஷன் பார்த்து வருவதாக நடிகர் பிருத்விராஜ் தெரிவித்துள்ளார். இதனால் இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று கூறப்படுகிறது.
‘லூசிஃபர்’ படம் தமிழில் டப் செய்யப்பட்டு வெளியானது. தெலுங்கில் சிரஞ்சீவி நடிப்பில் ரீமேக் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
31 mins ago
சினிமா
33 mins ago
தமிழகம்
19 mins ago
தமிழகம்
56 mins ago
தமிழகம்
1 hour ago
உலகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
கார்ட்டூன்
4 hours ago
கருத்துப் பேழை
5 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago