2018-ம் ஆண்டு இறுதியில் ராஜமவுலி இயக்கத்தில் உருவாகும் படத்தில் மகேஷ்பாபு நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
'பாகுபலி' படத்தைத் தொடர்ந்து ராஜமவுலி இயக்கத்தில் உருவாகவுள்ள படம் என்ன என்பது குறித்து எந்தொரு தகவலுமே வெளியாகவில்லை. தொடர்ச்சியாக பணிபுரிந்து வந்ததால் ஓய்விலிருந்து வருகிறார் ராஜமவுலி.
இந்நிலையில், 2018-ம் ஆண்டு இறுதியில் ராஜமவுலி இயக்கவுள்ள புதிய படத்தில் மகேஷ்பாபு நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதனை மகேஷ்பாபுவும் 'ஸ்பைடர்' படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்வில் உறுதிப்படுத்தியுள்ளார்.
தற்போது 'ஸ்பைடர்' படத்தைத் தொடர்ந்து கொரட்டலா சிவா இயக்கத்தில் உருவாகும் 'பாரத் அனே நேனு' படத்தில் நடித்து வருகிறார் மகேஷ்பாபு. அதனைத் தொடர்ந்து வம்சி இயக்கத்தில் உருவாகும் படத்தில் கவனம் செலுத்தவுள்ளார். இவ்விரண்டு படங்களை முடித்துவிட்டு 2018-ம் ஆண்டு இறுதியில் ராஜமவுலி படத்தில் கவனம் செலுத்துவார் எனத் தெரிகிறது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 mins ago
சினிமா
22 mins ago
தமிழகம்
17 mins ago
தமிழகம்
31 mins ago
இந்தியா
37 mins ago
தமிழகம்
47 mins ago
சினிமா
58 mins ago
சினிமா
1 hour ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
2 hours ago
கல்வி
1 hour ago
விளையாட்டு
2 hours ago