குழந்தை நட்சத்திரமாக சில படங்களில் நடித்திருந்தாலும், 2003ம் ஆண்டு வெளிவந்த ‘கங்கோத்ரி’ என்ற தெலுங்கு படம் மூலம் ஹீரோவானார், அல்லு அர்ஜுன். தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து தனக்கென ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கி வைத்திருக்கும் அவர், ‘புஷ்பா’ படம் மூலம் இந்தியா முழுவதும் ரசிகர்களைப் பெற்றுள்ளார்.
இந்நிலையில் அல்லு அர்ஜுன், கதாநாயகனாக நடிக்க ஆரம்பித்து 20 வருடம் ஆனதை ஒட்டி, ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். “சினிமாவில் 20 வருடங்களை நிறைவு செய்கிறேன். நீங்கள் காட்டிய அன்பிற்காக ஆசிர்வதிக்கப் பட்டிருக்கிறேன். திரைத்துறையில் இருக்கும் அனைவருக்கும் கடமைப்பட்டுள்ளேன். ரசிகர்களின் அன்பினால்தான் இந்த இடத்தை அடைந்திருக்கிறேன். அனைவருக்கும் நன்றி” என்று தெரிவித்துள்ளார். அவருக்கு சமந்தா, பாடகி ஸ்ரேயா கோஷல், கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் உட்பட பலர் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
1 hour ago
ஜோதிடம்
1 hour ago
தமிழகம்
7 hours ago
சினிமா
7 hours ago
சுற்றுச்சூழல்
8 hours ago
உலகம்
9 hours ago
வாழ்வியல்
9 hours ago
விளையாட்டு
10 hours ago
விளையாட்டு
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
சினிமா
11 hours ago