அல்லு அர்ஜுன் நடித்து டிசம்பர் மாதம் வெளியான படம் ‘புஷ்பா’. ராஷ்மிகா மந்தனா, ஃபகத் பாசில், சுனில், அஜய் கோஷ், மைம் கோபி உட்பட பலர் நடித்தனர்.
சுகுமார் இயக்கிய இந்தப் படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசை அமைத்திருந்தார். சமந்தா ஒரு பாடலுக்கு ஆடியிருந்தார். பான் இந்தியா முறையில் வெளியான இந்தப் படம் மெகா வெற்றி பெற்றது. வட இந்தியாவில் மட்டும் நூறு கோடிக்கு மேல் வசூலித்தது.
இப்போது இதன் இரண்டாம் பாகம் உருவாகிறது. முதல் பாகம் வெற்றி பெற்றிருப்பதால், இரண்டாம் பாகத்தை இன்னும் பிரம்மாண்டமாக உருவாக்க உள்ளனர். இந்தப் படத்துக்காக, நடிகர் அல்லு அர்ஜுனுக்குப் பேசப்பட்டுள்ள சம்பளம் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. முதல் பாகத்தில் குறைவான சம்பளம் வாங்கிய அவருக்கு,
இரண்டாம் பாகத்துக்கு ரூ.125 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதன் மூலம் ரஜினிகாந்த், விஜய், இந்தி நடிகர்கள் சல்மான் கான், அக் ஷய்குமார் வரிசையில் சம்பள விஷயத்தில் அவர் இணைந்துள்ளதாகத் தெரிவிக்கின்றனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
13 mins ago
சினிமா
3 mins ago
உலகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
கல்வி
2 hours ago