'கே.ஜி.எஃப் 2' வெளியீட்டுத் தேதி முடிவு

By செய்திப்பிரிவு

யாஷ் நடிப்பில் உருவாகியுள்ள 'கே.ஜி.எஃப் 2' படத்தை செப்டம்பர் 9-ம் தேதி வெளியிடப் படக்குழு திட்டமிட்டுள்ளது.

'கே.ஜி.எஃப்' படத்தைத் தொடர்ந்து 'கே.ஜி.எஃப் 2' தயாரிப்பில் உள்ளது. இதன் படப்பிடிப்பு முழுமையாக முடிந்து, இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. பிரசாந்த் நீல் இயக்கியுள்ள இந்தப் படத்தில் யாஷ், சஞ்சய் தத், ரவீனா டண்டன், பிரகாஷ் ராஜ், ஸ்ரீநிதி ஷெட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என ஒரே சமயத்தில் அனைத்து மொழிகளிலும் 'கே.ஜி.எஃப் 2' வெளியாகவுள்ளது. இந்தப் படத்தின் இறுதிக்கட்டப் பணிகளை கவனித்துக் கொண்டே, பிரபாஸ் நடித்து வரும் 'சலார்' படத்தையும் இயக்கி வருகிறார் பிரசாந்த் நீல்.

ஜூலை 16-ம் தேதி 'கே.ஜி.எஃப் 2' வெளியாகும் எனப் படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்தனர். ஆனால், கரோனா 2-வது அலையின் தீவிரத்தால் படத்தின் இறுதிக்கட்டப் பணிகளில் தொய்வு ஏற்பட்டது. இதனால் படத்தின் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டது.

தற்போது கரோனா 2-வது அலையின் தீவிரம் குறைந்துவருவதால், படத்தின் இறுதிக்கட்டப் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது படக்குழு. இதுவரை 95% பணிகள் முடிந்துள்ளன. இதனைத் தொடர்ந்து இதர மொழிகளின் டப்பிங் பணிகளை முடிக்க வேண்டும்.

இதனால் செப்டம்பர் 9-ம் தேதி 'கே.ஜி.எஃப் 2' படத்தை வெளியிடப் படக்குழு முடிவு செய்துள்ளது. விரைவில் இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

4 mins ago

சினிமா

3 hours ago

இந்தியா

12 mins ago

கருத்துப் பேழை

2 hours ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

விளையாட்டு

7 hours ago

வணிகம்

8 hours ago

விளையாட்டு

9 hours ago

தொழில்நுட்பம்

10 hours ago

சினிமா

11 hours ago

க்ரைம்

11 hours ago

மேலும்