நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கவுள்ள படத்தில் பணிபுரிய 'மஹாநடி' தொழில்நுட்பக் கலைஞர்களே ஒப்பந்தமாகியுள்ளனர்.
நாக் அஸ்வின் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான படம் 'மஹாநடி'. இந்தப் படம் மாபெரும் வரவேற்பைப் பெற்று, தேசிய விருதையும் வென்றது. இதனால் நாக் அஸ்வினின் அடுத்த படத்துக்குப் பெரும் எதிர்பார்ப்பு உருவானது. ஆனால், அவருடைய அடுத்த படத்தையும் 'மஹாநடி' படத்தைத் தயாரித்த வைஜெயந்தி மூவிஸ் நிறுவனமே தயாரிக்கவுள்ளது.
அந்நிறுவனத்தின் 50-வது ஆண்டு என்பதால் மாபெரும் பொருட்செலவில் தயாராகும் இந்தப் படம் அனைத்து மொழிகளிலும் வெளியாகவுள்ளது. இந்தப் படத்தின் நாயகனாக பிரபாஸ் நடிக்கவுள்ளார். அவருடன் அமிதாப் பச்சன், தீபிகா படுகோன் ஆகியோர் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர்.
இந்தப் படத்தின் முதற்கட்டப் பணிகள் நீண்ட நாட்களாகவே நடைபெற்று வருகின்றன. தற்போது இந்தப் படத்துக்கு 'மஹாநடி' படத்துக்கு ஒளிப்பதிவு செய்த டேனி சன்சேஸ் லோபஸ், இசையமைப்பாளராக மிக்கி ஜே.மேயர் ஆகியோர் பணிபுரியவுள்ளனர். இதனைப் படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு எப்போது படப்பூஜையுடன் தொடங்கும் என்பது விரைவில் தெரியவரும்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
43 mins ago
இந்தியா
37 mins ago
விளையாட்டு
1 hour ago
தமிழகம்
56 mins ago
இந்தியா
2 hours ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
விளையாட்டு
2 hours ago
இந்தியா
2 hours ago
தமிழகம்
2 hours ago