இசை உலகுக்கு மிக இருண்ட நாள் என்று எஸ்பிபி மறைவு குறித்து சிரஞ்சீவி உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.
தமிழ், தெலுங்கு, கன்னடம் என அனைத்து மொழிகளிலும் முன்னணிப் பாடகராக வலம் வந்தவர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். ஆகஸ்ட் 5-ம் தேதி எஸ்.பி.பிக்கு கரோனா தொற்று உறுதியாகி எம்ஜிஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சில நாட்களில் அவருடைய உடல்நிலை மோசமடைந்தது. பின்பு உடல்நிலை தேறி வந்தார். இந்நிலையில் நேற்று திடீரென அவரது உடல்நிலை மோசமடைந்தது.
தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும், பலனளிக்காமல் இன்று (செப்டம்பர் 25) மதியம் 1:04 மணிக்கு காலமானார். அவருடைய மறைவுக்கு திரையுலகப் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
எஸ்பிபி மறைவு குறித்து தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் சிரஞ்சீவி தனது ட்விட்டர் பதிவில் வெளியிட்டுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
"இசை உலகுக்கு மிக இருண்ட நாள். எஸ்பி பாலு போன்ற, ஈடு இணையில்லாத இசை மேதையின் மறைவோடு ஒரு சகாப்தம் முடிவுக்கு வந்துள்ளது. தனிப்பட்ட முறையில் எனது வெற்றிக்கு, எனக்காக எண்ணற்ற, மறக்க முடியாத பாடல்களைப் பாடிய பாலு அவர்களின் குரலுக்கு நான் அதிகக் கடன்பட்டிருக்கிறேன்.
இன்னொரு சகாப்தமான கண்டசாலாவுக்குப் பிறகு யார் வருவார்கள் என்று இசை உலகம் ஆச்சரியப்பட்டுக் கொண்டிருக்கும் போது எஸ்பிபி வடிவில், இசை உலகுக்கு மிகப் பிரகாசமான நட்சத்திரம் வந்தது. அவரது மென்மையான குரல் மொழி, கலாச்சார எல்லைகளைத் தாண்டியது, இந்தியா முழுவதும் பல ரசிகர்களைப் பல வருடங்கள் கட்டிப்போட்டது. மீண்டும் இன்னொரு எஸ்பிபி வரவே முடியாது. அவரே தான் மீண்டும் பிறந்து வந்து வெற்றிடத்தை நிரப்ப வேண்டும். அவரது இழப்பால் நொறுங்கிப் போயிருக்கிறேன். உங்கள் ஆன்மா சாந்தியடையட்டும் பாலு அவர்களே"
இவ்வாறு சிரஞ்சீவி தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
11 mins ago
தமிழகம்
25 mins ago
விளையாட்டு
52 mins ago
விளையாட்டு
54 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
1 hour ago
ஓடிடி களம்
1 hour ago
விளையாட்டு
1 hour ago
சினிமா
1 hour ago
உலகம்
2 hours ago
விளையாட்டு
2 hours ago