மோகன்லால் நடிப்பில் உருவாகவுள்ள 'த்ரிஷ்யம் 2' படப்பிடிப்பில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
2013-ம் ஆண்டு ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான படம் 'த்ரிஷ்யம்'. மலையாளத்தில் பிரம்மாண்ட வரவேற்பைப் பெற்ற இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, சிங்களம் உள்ளிட்ட மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. சீன மொழியில் ரீமேக் செய்யப்பட்ட முதல் இந்தியப் படம் 'த்ரிஷ்யம்' தான் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படத்துக்குப் பிறகு மோகன்லால் - ஜீத்து ஜோசப் இணைப்பில் 'ராம்' படம் உருவானது. ஆனால், கரோனா ஊரடங்கினால் வெளிநாடு படப்பிடிப்புக்கு செல்ல முடியாத சூழலால் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடர முடியாமல் போனது. இந்தச் சூழலில் மோகன்லால் - ஜீத்து ஜோசப் கூட்டணி 'த்ரிஷ்யம் 2' படத்தை அறிவித்தது.
மோகன்லால் படத்தின் பிறந்த நாளான மே 21-ம் தேதி இந்தப் படம் தொடக்கத்தை வீடியோவாக அறிவித்தார்கள். கேரளாவைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஆகஸ்ட் மாதத்தில் படப்பிடிப்பைத் தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளது. ஆனால் கரோனா அச்சுறுத்தல், கடும் மழை ஆகியவற்றால் 'த்ரிஷ்யம் 2' படப்பிடிப்பை ஒத்தி வைத்துவிட்டார்கள். செப்டம்பர் மாதத்தில் தொடங்கும் எனத் தெரிகிறது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
11 mins ago
இந்தியா
19 mins ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
விளையாட்டு
2 hours ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
2 hours ago
தமிழகம்
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
விளையாட்டு
3 hours ago