தொழிலதிபரை மணந்தார் நடிகை பிரியாமணி

By இரா.வினோத்

பிரபல நடிகை பிரியாமணியின் திருமணம் பெங்களூருவில் நேற்று எளிமையாக நடந்தது.

பாரதிராஜா இயக்கிய ‘கண்களால் கைது செய்’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் பிரியாமணி. அமீர் இயக்கிய ‘பருத்தி வீரன்’ படத்தில் சிறப்பாக நடித்ததற்காக அவருக்கு தேசிய விருது கிடைத்தது. இதைத் தொடர்ந்து தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் 50-க்கும் மேற்பட்ட படங்களில் அவர் நடித்துள்ளார்.

இந்நிலையில் பிரியாமணிக்கும், மும்பையை சேர்ந்த தொழிலதிபர் முஸ்தபா ராஜுக்கும் இடையே கடந்த ஆண்டு மே 27-ம் தேதி நிச்சயதார்த்தம் நடந்தது. இதையடுத்து நேற்று பெங்களூருவில் உள்ள பனசங்கரியில் பிரியாமணி - முஸ்தபா ராஜ் இருவரும் எளிய முறையில் பதிவுத் திருமணம் செய்து கொண்டனர்.

இந்த திருமண நிகழ்ச்சியில் நெருங்கிய உறவினர்கள் மட்டும் கலந்து கொண்டனர். இன்று பெங்களூருவில் நடைபெறும் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் நண்பர்களும், திரையுலகினரும் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள் ளது.

திருமணம் தொடர்பாக பிரியாமணி கூறும்போது, “நானும் அவரும் வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர்கள். எனவே யாருடைய மத நம்பிக்கையையும் காயப்படுத்தாமல், எளிய முறையில் பதிவுத் திருமணம் செய்துகொண்டோம். திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து திரைப்படங்களில் நடிப்பேன்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

56 mins ago

ஜோதிடம்

1 hour ago

தமிழகம்

7 hours ago

சினிமா

7 hours ago

சுற்றுச்சூழல்

8 hours ago

உலகம்

8 hours ago

வாழ்வியல்

8 hours ago

விளையாட்டு

9 hours ago

விளையாட்டு

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

சினிமா

11 hours ago

மேலும்