ஜனவரி 11-ம் தேதி வெளியாகிறது கைதி எண் 150

By ஸ்கிரீனன்

சீரஞ்சிவி நடிப்பில் உருவாகி வந்த 'கத்தி' ரீமேக்கான 'கைதி எண் 150', ஜனவரி 11-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் பெரும் வரவேற்பைப் பெற்ற 'கத்தி' தெலுங்கில் ரீமேக்காகி வருகிறது. இப்படத்தின் மூலம் சிரஞ்சீவி மீண்டும் திரையுலகுக்கு திரும்ப இருப்பதால், பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

சிரஞ்சீவி, காஜல் அகர்வால் உள்ளிட்ட பலர் நடித்த இப்படத்தை வி.வி.விநாயக் இயக்கினார். ரத்னவேலு ஒளிப்பதிவு செய்த இப்படத்துக்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ளார் . ராம்சரண் மற்றும் லைக்கா நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளனர்.

'கைதி எண் 150' என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் இறுதிகட்ட பணிகளைத் துரிதமாக மேற்கொண்டு வருகிறது படக்குழு. இதன் தணிக்கை பணிகள் நிறைவடைந்தன.

தற்போது இப்படம் ஜனவரி 11-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. அதற்கு முன்பாக ஜனவரி 7-ம் தேதி பிரம்மாண்டமான விழா ஒன்றுக்கு படக்குழு ஏற்பாடு செய்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சுற்றுச்சூழல்

4 mins ago

இந்தியா

7 mins ago

இந்தியா

14 mins ago

விளையாட்டு

20 mins ago

கருத்துப் பேழை

3 hours ago

தமிழகம்

2 hours ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

விளையாட்டு

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

விளையாட்டு

12 hours ago

மேலும்