அனுராக் காஷ்யப் படத்தின் நாயகனாக மலையாள நடிகர் ரோஷன் மாத்யூ

By செய்திப்பிரிவு

அனுராக் காஷ்யப் தனது அடுத்த படத்தின் கதாநாயகனாக, மலையாள திரையுலக நடிகர் ரோஷன் மாத்யூவை தேர்ந்தெடுத்துள்ளார்.

நடிகை, இயக்குநர் கீது மோகன்தாஸ் 'மூத்தோன்' என்ற படத்தை எடுத்து வருகிறார். இந்த படத்தின் இணை கதாசிரியர் அனுராக் காஷ்யப். படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் ரோஷன் மாத்யூ என்ற நடிகர் நடித்துள்ளார். அவரது நடிப்பில் ஈர்க்கப்பட்ட அனுராக் காஷ்யப், தனது அடுத்த படத்தின் நாயகனாக மாத்யூவை முடிவுசெய்துவிட்டார்.

இதுகுறித்து சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ள கீது மோகன்தாஸ், "மூத்தோன் படத்தின் படப்பிடிப்பில் அனைத்து நடிகர்களும் எனக்கு நெருங்கிய நண்பர்களாகிவிட்டனர். அவர்கள் வாழ்க்கையில் நன்றாக இருக்க வேண்டும் என்றே நான் நினைப்பேன்.

எப்போதும் நினைப்பேன். மூத்தோனில் அற்புதமான நடிப்பைத் தந்துள்ள என் நல்ல நண்பர் மற்றும் நடிகர் ரோஷன் மாத்யூ, இயக்குநர் அனுராக் காஷ்யப்பின் படத்தில் நாயகனாக நடிக்கும் வாய்ப்பைப் பெற்றுள்லார் என்பதை பெருமையுடன் அறிவிக்கிறேன். படத்தின் படப்பிடிப்பு நாளை (வியாழக்கிழமை) மும்பையில் தொடங்குகிறது.

இது வெறும் ஆரம்பம்தான் ரோஷன். மனமார்ந்த வாழ்த்துகள்.

உன் பெருமைமிகு இயக்குநர்" என்று குறிப்பிட்டுள்ளார். மேடை நாடக நடிகரான ரோஷன் மாத்யூ மம்மூட்டியின் 'புதிய நியமனம்' படத்தில் வில்லனாக நடித்து பிரபலமானவர். அஞ்சலி மேனனின் 'கூடே' படத்தில் இவரது நடிப்பு பாராட்டைப் பெற்றது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஓடிடி களம்

5 mins ago

தமிழகம்

12 mins ago

தமிழகம்

26 mins ago

தமிழகம்

46 mins ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

விளையாட்டு

2 hours ago

இணைப்பிதழ்கள்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இணைப்பிதழ்கள்

2 hours ago

இணைப்பிதழ்கள்

3 hours ago

மேலும்