அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டோர் நடித்து 2021-ம் ஆண்டு வெளியான படம், ‘புஷ்பா: தி ரைஸ்’. சுகுமார் இயக்கிய இந்தப் படத்துக்குத் தேவி ஸ்ரீ பிரசாத் இசை அமைத்திருந்தார்.
இந்தப் படம் வெற்றி பெற்றதை அடுத்து, இதன் அடுத்த பாகம் இப்போது உருவாகி வருகிறது. ‘புஷ்பா: தி ரூல்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இதன் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ஆக.15-ம் தேதி வெளியாகிறது. முதல் பாகம் இந்தியா முழுவதும் வரவேற்பைப் பெற்றதால், அடுத்த பாகத்துக்கும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்நிலையில், நடிகர் அல்லு அர்ஜுன், தனது சம்பளத்தை ரூ.150 கோடியாக உயர்த்தியுள்ளார் என்கிறார்கள். முந்தைய படத்துக்கு வாங்கிய சம்பளத்தில் இருந்து 30 சதவிகிதத்தை உயர்த்திவிட்டதாகக் கூறப்படுகிறது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
5 hours ago
சினிமா
5 hours ago
சுற்றுச்சூழல்
6 hours ago
உலகம்
6 hours ago
வாழ்வியல்
7 hours ago
விளையாட்டு
8 hours ago
விளையாட்டு
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
சினிமா
9 hours ago
க்ரைம்
9 hours ago
தமிழகம்
9 hours ago