இந்தி நடிகை ராதிகா ஆப்தே, தமிழில், ‘தோனி’, ‘ஆல் இன் ஆல் அழகுராஜா’, ‘வெற்றிச்செல்வன்’, ‘கபாலி’, ‘சித்திரம் பேசுதடி 2’ உட்பட சில படங்களில் நடித்துள்ளார். இவர், திரைக்கதை எழுத 3 வருடங்களாகப் பயிற்சிப் பெற்று வருவதாகக் கூறியுள்ளார். இதுபற்றி மேலும் அவர் கூறியிருப்பதாவது:
திரைக்கதை எழுதும் கலை பற்றி படிப்பது மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது. அதில் இன்னும் நான் முழுமையாகத் தேறவில்லை. சில ஸ்கிரிப்ட் ரைட்டர்களிடம் இதுபற்றி படித்துக் கொண்டி ருக்கிறேன். ஒரு படத்தை எழுதி இயக்க விரும்புகிறேன். அதற்காக நடிப்பை கைவிடப் போகிறீர்களா? என்று கேட்காதீர்கள். அது என் முதல் காதல். எனக்கு வயது இருக்கிறது என்பதால் கற்றுக் கொள்வதற்கான வாய்ப்புகளைப் பயன்படுத்த விரும்புகிறேன். இவ்வாறு ராதிகா ஆப்தே தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
29 mins ago
கல்வி
43 mins ago
தமிழகம்
55 mins ago
கல்வி
57 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சுற்றுச்சூழல்
2 hours ago
சினிமா
2 hours ago
தமிழகம்
3 hours ago
இந்தியா
3 hours ago