பாலிவுட்டில் மூன்றாவது படம்: ரன்பீர் படத்தில் இணைந்த ராஷ்மிகா மந்தனா

By செய்திப்பிரிவு

பாலிவுட்டில் தனது மூன்றாவது படத்தில் கமிட் ஆகியுள்ளார் நடிகை ராஷ்மிகா மந்தனா.

புஷ்பா படம் மூலமாக இந்திய திரையுலகம் முழுவதும் அறியப்படும் நாயகியாக மாறிய நடிகை ராஷ்மிகா மந்தனா, அந்தப் படம் வெளியாகும் முன்பே பாலிவுட் சில படங்களில் பணிபுரிவது தொடர்பாக பேச்சுக்கள் எழுந்தன. அதன்படி, மிஷன் மஜ்னு என்ற முதல் பாலிவுட் படத்தில் கமிட் ஆனார். அந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடையும் முன்பாகவே, தனது அடுத்தப் பாலிவுட் படத்திலும் கமிட் ஆகி மற்ற நடிகைகளுக்கு அதிர்ச்சி கொடுத்தார்.

இரண்டாவதாக ராஷ்மிகா ஒப்பந்தம் ஆன பாலிவுட் படம் குட்பை.இந்த இரண்டு படங்களுமே படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடெக்சன் பணிகள் நடந்து வருகின்றன. இதனிடையே தான் புஷ்பா படம் மூலமாக வட இந்திய மாநிலங்களில் பிரபல நடிகையாகினார். இதைத் தொடர்ந்து அவருக்கு நிறைய பட வாய்ப்புகள் இந்தி திரையுலகில் இருந்து வர ஆரம்பித்தன.

அந்த வகையில் பாலிவுட்டில் தனது மூன்றாவது படத்தில் கமிட் ஆகியுள்ளார் நடிகை ராஷ்மிகா மந்தனா. பிரபல பாலிவுட் நடிகரான ரன்பீர் கபூர் நடிக்கும் 'அனிமல்' (Animal) படத்தில் தான் தற்போது ராஷ்மிகா இணைந்துள்ளார். 'அர்ஜுன் ரெட்டி' படத்தை இயக்கிய சந்தீப் ரெட்டி வாங்கா இந்தப் படத்தை இயக்கவுள்ளார். விரைவில் இதன் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. பாலிவுட்டில் ஒரு படம் கூட ரிலீஸ் ஆகாத நிலையில் அடுத்தடுத்து மூன்று படங்களில் ராஷ்மிகா கமிட் ஆகி இருப்பது அவருக்கான மவுசு எகியிருப்பதை வெளிப்படுத்துகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 mins ago

தமிழகம்

9 mins ago

இலக்கியம்

6 hours ago

இலக்கியம்

7 hours ago

இலக்கியம்

6 hours ago

தமிழகம்

33 mins ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

சினிமா

57 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

மேலும்