'தன்ஹாஜி' இயக்குநர் ஓம் ராவத் இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கவுள்ள புதிய படம் தொடர்பான அறிவிப்பு கடந்த மாதம் 18-ம் தேதி அன்று அறிவிக்கப்பட்டது. பூஷண் குமார் தயாரிக்கவுள்ள இந்தப் படம் 3டி தொழில்நுட்பத்தில் பெரும் பொருட்செலவில் உருவாகிறது.
இந்தி மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் இப்படம் உருவாக்கப்பட்டு, இதர மொழிகளில் டப்பிங் செய்யப்படவுள்ளது. 'ஆதிபுருஷ்' என்ற பெயரில் உருவாகும் இந்தப் படத்தின் போஸ்டர் மூலமாக 'ராமாயணம்' கதையின் ஒரு பகுதியைப் படமாக்குகிறார்கள் என்பது தெளிவாகிறது.
இப்படத்தில் ராமராக பிரபாஸும், ராவணனாக சைஃப் அலி கானும் நடிக்கின்றனர் என்பதை கடந்த சில தினங்களுக்கு முன்பு படக்குழுவினர் உறுதி செய்தனர்.
இந்நிலையில் 'ஆதிபுருஷ்' படத்தில் சீதையாக நடிக்கப்போவது யார் என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்தது. அனுஷ்கா சர்மா இதற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும், இதற்கான அறிவிப்பை படக்குழுவினர் விரைவில் வெளியிடவுள்ளனர் என்றும் சமூக வலைதளங்களில் தகவல் வெளியானது.
ஆனால், கருவுற்றிருக்கும் அனுஷ்கா சர்மா பிரசவத்துக்குப் பிறகு உடனடியாக படங்களில் நடிக்க மாட்டார் எனவும், ஏற்கெனவே ஒப்பந்தம் செய்யப்பட்ட படங்கள் வரிசையில் இருப்பதால் ‘ஆதிபுருஷ்’ படத்தில் அனுஷ்கா சர்மா நடிக்க வாய்ப்பில்லை என்றும் கூறப்படுகிறது.
'சாஹோ' மற்றும் 'ராதே ஷ்யாம்' படங்களுக்குப் பிறகு பூஷண் குமார் -பிரபாஸ் இணையும் மூன்றாவது படம் 'ஆதிபுருஷ்'. இப்படத்தின் முன் தயாரிப்புப் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. 2021-ம் ஆண்டு இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி 2022-ம் ஆண்டு பிரம்மாண்டமான முறையில் திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முக்கிய செய்திகள்
இந்தியா
17 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
கருத்துப் பேழை
3 hours ago
இந்தியா
1 hour ago
கருத்துப் பேழை
3 hours ago
இந்தியா
1 hour ago
ஆன்மிகம்
1 hour ago
ஜோதிடம்
3 hours ago
ஜோதிடம்
3 hours ago
விளையாட்டு
8 hours ago